MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அவர் என் முன்னாள் காதலன்! குணசேகரனை தூக்கி எறிந்துவிட்டு ஜீவானந்தத்தை தேடி செல்லும் ஈஸ்வரி! அதிரடி திருப்பம்!

அவர் என் முன்னாள் காதலன்! குணசேகரனை தூக்கி எறிந்துவிட்டு ஜீவானந்தத்தை தேடி செல்லும் ஈஸ்வரி! அதிரடி திருப்பம்!

'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது குணசேகரனை ஈஸ்வரி உள்ளிட்ட 4 மருமகள்களும் தேடி செல்வது தான் இன்றைய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 28 2023, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்' இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல்... இளைஞர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பி யிலும் ஒவ்வொரு வாரமும் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள இந்த சீரியலில், தினம் தோறும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அதிரடியாக நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

மேலும் எப்படியும் அப்பத்தாவிடம் இருந்து 40 சதவீத சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் குணசேகரன் மிகவும் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் அப்பத்தா மிகவும் சாமர்த்தியமாக, ஜீவானந்தம் பெயருக்கு தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் எழுதி வைத்துவிட்டார். இது குறித்து பிரச்சனை எழுந்தபோது, அப்பத்தாவே நீதிபதியிடம் வந்து ஜீவானந்தத்தின் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்தது நான்தான் என்றும், ஜீவானந்தம் மிகவும் நல்லவர் என கூறி ஜீவானந்தத்தை ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்தார். அப்பத்தாவின் இந்த செயல் குணசேகரனுக்கு மேலும் குடைச்சலாக மாறியது.

தேவயானி, ஆல்யா மானசா, என கர்ப்பமாக இருக்கும் போது கூட சீரியலில் நடித்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

36

அப்பத்தாவை உருட்டி மிரட்டி சொத்துக்களை வாங்கி விடலாம் என குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், அது நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது அப்பத்தா ஜீவானந்தத்துடன் தான் இருக்கிறார். இதற்கிடையில் குணசேகரனால் அப்பத்தாவுக்கு எந்த பிரச்னையும் வந்து விட கூடாது என ஜனனி, ரேணுகா, நந்தினி,ஈஸ்வரி ஆகியோர் நினைக்கும் நிலையில் எப்படியும் அப்பத்தா மற்றும் குணசேகரனை சந்தித்து இதுகுறித்து அலர்ட் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.

46

இதற்க்கு  ஜனனி அவர் நம்மளை பார்ப்பாரா என தெரியவில்லை என விரத்தியுடன் பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி கண்டிப்பாக பார்ப்பார் என கூறுகிறார். மேலும் ஜீவானந்தம் தன்னுடைய முன்னாள் காதலர் என்பதையும் முதல் முறையாக தன்னுடைய சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்கிறார் ஈஸ்வரி.

இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!

56

ஒருபுறம் ஜனனி இறந்து போன ஜீவானந்தத்தின் மனைவியின் கொலைக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் என ஆதங்கப்படுவது போல் சக்தியிடம் பேச, இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள குணசேகரன் மற்றும் கதிரை ஈஸ்வரியும், நந்தினியும் வெறுக்க துவங்கிவிட்டனர். ஏற்னவே கணவன் குணசேகரனை விரோதிபோல் பார்த்துக்கொண்டிருக்கும் ஈஸ்வரி, தற்போது ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோருடன் சென்று ஜீவனந்தத்தை சந்திக்க தயாராகியுள்ளார்.

66

இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. ஜனனி, ஈஸ்வரி இருவரும் ரேணுகா மற்றும் நந்தினிக்காக வாசலில் கார்த்திருக்கும் போது, நந்தினி கதிர் மேல் உள்ள கோவத்தில் கண்டமேனிக்கு பேசி திட்டுகிறார். இதற்க்கு குணசேகரன்... இங்க எதுவும் பேசவேண்டாம், போய் அப்பத்தாவை சந்தித்து சொத்துக்களை வாங்கி வரும் படி கூறுகிறார். இதை தொடர்ந்து... வெளியே வந்து ஜனனி மற்றும் ஈஸ்வரியை நந்தினியும், ரேணுகாவும் சந்திக்கிறார்கள்.  அப்போது ஈஸ்வரி, "ஜீவானந்தத்தின் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரம் நடக்கும் என நினைக்கவில்லை அதுவும் என் சம்பந்தப்பட்ட ஒருவரின் மூலம் நடக்கும் என சத்தியமாக நான் எதிர்பார்க்கல என கூறுகிறார்". இதோடு இன்றைய ப்ரோமோ முடிவடைகிறது. குணசேகரனுக்கு எதிராக திரும்பி, ஜீவானந்தத்தின் நல்ல மனதுக்கு ஈஸ்வரி துணை நிற்க இவர் ஜீவானந்தத்தை தேடி செல்லும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகை விஜயலட்சுமி வீட்டு வரலட்சுமி நோம்பு எப்படி இருக்குனு பாருங்க..! வைரலாகும் போட்டோஸ்..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved