- Home
- டெக்னாலஜி
- ₹1 லட்சம் கொடுத்தாலும் பாதுகாப்பு இல்லையா? Android-ஐ விட iPhone-க்கு 58% கூடுதல் ஆபத்து! லேட்டஸ்ட் ஆய்வில் ஷாக்!
₹1 லட்சம் கொடுத்தாலும் பாதுகாப்பு இல்லையா? Android-ஐ விட iPhone-க்கு 58% கூடுதல் ஆபத்து! லேட்டஸ்ட் ஆய்வில் ஷாக்!
iPhone Vs Android Google மற்றும் YouGov நடத்திய ஆய்வில், Android-ஐ விட iPhone பயனர்கள் 58% அதிக மோசடி மற்றும் ஸ்பேம் மெசேஜ்களுக்கு ஆளாகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

iPhone Vs Android விலையுயர்ந்த iPhone-லும் பாதுகாப்பு குறைபாடு?
உங்கள் iPhone-இன் விலை ₹1 லட்சம் என்பதால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தானாகவே பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால், அது தவறான எண்ணமாக இருக்கலாம்! சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய அளவிலான ஆய்வு இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவின்படி, Android போன்களை விட iPhone பயனர்கள்தான் மோசடி மற்றும் ஸ்பேம் செய்திகளுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
Android பயனர்களுக்கு 58% குறைவான ஆபத்து
Google மற்றும் YouGov இணைந்து இந்தியா உட்பட பல நாடுகளில், சுமார் 5,000 ஸ்மார்ட்போன் பயனர்களிடம் இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வின் முடிவில், Android பயனர்கள், iPhone பயனர்களைக் காட்டிலும் 58% குறைவான ஸ்பேம் மெசேஜ்களைப் பெறுவது தெரியவந்துள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு ஃபிஷிங் (Phishing) அல்லது மோசடி குறுஞ்செய்திகள் மிகக் குறைவாகவே வருகின்றன. iPhone பயனர்களோ, அதிகப்படியான போலியான இணைப்புகள் (Fake Link) மற்றும் ஸ்பேம் செய்திகளைப் பெறுவதாகவும், இதுவே ஆன்லைன் மோசடிக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைப்புகள்தான் முக்கிய காரணம்
இந்த இரு இயங்குதளங்களுக்கு இடையே உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு வேறுபாட்டிற்கு, அவை கொண்டுள்ள இயல்புநிலை பாதுகாப்பு (Default Security) மற்றும் செய்தி வடிகட்டுதல் (Message Filtering) அமைப்புகளே காரணம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. சில சமயங்களில், ஆண்ட்ராய்டு பயனர்களை விட ஐபோன் பயனர்கள் 96% வரை அதிக மோசடி குறுஞ்செய்திகளைப் பெற்றுள்ளனர் என்றும் இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், மற்றுமொரு ஆய்வில், Google Pixel 10 Pro ஸ்மார்ட்போன்தான் மிகச் சிறந்த இயல்புநிலை மோசடி தடுப்பு அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
AI தான் இறுதிப் பாதுகாப்பு அரண்
உலக அளவில் AI மூலம் நிகழ்த்தப்படும் மோசடிகள் (AI-induced Frauds) அதிகரித்து வருவதாகவும், இதன் மூலம் ஆண்டுதோறும் $400 பில்லியனுக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுவதாகவும் Google தெரிவித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, Android போன்களில் AI தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த AI அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்பு, ஒவ்வொரு மாதமும் 10 பில்லியனுக்கும் அதிகமான ஸ்பேம் அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் திறம்படத் தடுக்கிறது. எனவே, தற்போது, Google Pixel 10 சீரிஸ் தான் ஒருங்கிணைந்த AI அம்சங்கள் மூலம் சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கும் மிகவும் பாதுகாப்பான ஸ்மார்ட்போனாகக் கருதப்படுகிறது.