MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?

27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?

27 லட்சம் சிம் கார்டுகளை அரசு அதிரடியாக முடக்க உள்ளது. இந்த சிம் கார்டுகள் ஏன் முடக்கப்பட உள்ளன? ஒருவர் எத்தனை சிம்கள் வைத்திருக்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 16 2025, 07:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?

27 லட்சம் சிம் கார்டுகளை முடக்கும் அரசு! ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?

இந்தியாவில் அண்மை காலங்களில் சைபர் குற்றங்கள் மற்றும் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்துள்ளன. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் மோசடியை தடுத்து நிறுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இப்போது பீகார் அரசு இந்த விஷயத்தில் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது அங்கு 27 லட்சத்திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் முடக்கப்பட உள்ளன. 

பீகாரில் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பவர்களின் கார்டுகளை முடக்க தொலைத்தொடர்பு அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அந்த மாநிலத்தில் சுமார் 27 லட்சம் பேர் 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் தொலைத்தொடர்புத் துறையால் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட உள்ளன. 9 சிம் கார்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு இப்போதைக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

24
சிம் கார்டுகள்

சிம் கார்டுகள்

பயனர்கள் 90 நாட்களுக்குள் எந்த எண்களை செயலில் வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். பயனர்கள் செயலில் உள்ள எண்களைப் பற்றி தொலைத்தொடர்புத் துறைக்குத் தெரிவிக்கவில்லை என்றால் அந்த சிம் கார்டுகள் அனைத்தும் முடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பீகாரில் சிலர் தங்கள் பெயரில் 100-200க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

Amazon Discount: ஒன்பிளஸ் நோர்ட் 4 போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி! அதிரடி விலை குறைப்பு!

34
சிம் கார்டுகள் முடக்கம்

சிம் கார்டுகள் முடக்கம்

மொத்தமாக முடக்கப்பட உள்ள 27 லட்சம் சிம் கார்டுகளில் சுமார் 24 லட்சம் சிம் கார்டுகள் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது. மீதி 3 லட்சம் சிம் கார்டுகள் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.  சிம்கள் முடக்கப்பட உள்ளது குறித்து அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் இந்த தகவலை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளன. 

44
ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?

ஒருவர் எத்தனை சிம் கார்டு வைத்திருக்கலாம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் சிம் கார்டு வாங்குவதற்கு எந்த தடையும் இல்லை. யார் வேண்டுமானாலும் எத்தனை சிம் கார்டுகளையும் வாங்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை. எந்தவொரு தனி நபரும் ஒரு ஐடியில் 9 சிம் கார்டுகளை மட்டுமே செயலில் வைத்திருக்க முடியும். 9க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருந்தால் அவை முடக்கப்படும்.

மேலும் இது தண்டனைக்குரிய குற்றமாகும். தொடர்ந்து ஒருவர் அதிக சிம் கார்டுகளை வைத்திருப்பது தெரியவந்தால் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். நீங்கள் வைத்திருக்கும் சட்டவிரோத சிம்கள் மோசடிகளுக்கு காரணமாக இருந்தால் சிறை செல்லவும் நேரிடும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பிஎஸ்என்எல் பயனர்க‌ளுக்கு ஜாக்பாட்! 5 ரூபாய்க்கு 120 ஜிபி டேட்டா! அதிரடி பிளான்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
ஜியோ
ஏர்டெல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
e-SIM பயன்படுத்துபவர்களே உஷார்! ஒரே போன் கால்.. 11 லட்சத்தை இழந்த பெண் - தப்பிப்பது எப்படி?
Recommended image2
அடேங்கப்பா.. வெறும் ரூ.7,499 தானா? 5000mAh பேட்டரியுடன் லாவா செய்த தரமான சம்பவம்!
Recommended image3
உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் தருணம்.. 100 நாடுகள், 400 நிறுவனங்கள் - பிரம்மாண்ட AI மாநாடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved