பொய் செய்தி..! இரவோடு இரவாக தூக்கப்பட்ட பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் உட்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் விஜய்யை விமர்சித்தும், மற்றொரு பக்கம் காவல்துறையை குறை சொல்லியும், மேலும் இந்த விபத்திற்கு காரணம் செந்தில் பாலாஜி தான் காரணம் பதிவிடப்பட்டு வருகிறது..
இதனை கண்காணித்த போலீசார் 30 பேர் அவதூறு செய்தி பரப்பியதாக வழக்கு பதியப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து வருகின்றனர் . நேற்று மூன்று பேரை கைது செய்த நிலையில் இன்று யூடுபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் போலீசார் கைது செய்துள்ளனர்