- Home
- Tamil Nadu News
- வீட்டுக்கே வரவழைத்து கட்டிலில் சுபிதா! பார்க்க கூடாததை பார்த்த சித்தப்பா.. இறுதியில் அலறி கூச்சல்! நடந்தது என்ன?
வீட்டுக்கே வரவழைத்து கட்டிலில் சுபிதா! பார்க்க கூடாததை பார்த்த சித்தப்பா.. இறுதியில் அலறி கூச்சல்! நடந்தது என்ன?
Women Murder Case: கன்னியாகுமரியில் கள்ளக்காதலை கைவிட மறுத்த சுபிதா என்ற பெண், தன்னை கண்டித்த மாற்றுத்திறனாளி சித்தப்பாவை தாக்கியால் ஆத்திரத்தில் கொலை.

காதலித்து திருமணம்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத் (34). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சுபிதா (28). இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தும்பவிளை பகுதியை சேர்ந்த அனீஸ் (30) என்பவருக்கும், சுபிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் அருண் பிரசாத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
மகளை கண்டித்த சித்தப்பா
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதை அடுத்து கோபித்துக் கொண்டு சுபிதா அதே பகுதியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். மேலும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலைக்கு சென்று வந்தார். தனது குழந்தைகள் தந்தையுடன் தங்கும் நேரத்தில் கள்ளக்காதலன் அனீஸை வீட்டுக்கே வரவழைத்து சுபிதா உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இரவு முழுவதும் அனீசுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (45) கண்டித்துள்ளார்.
சுபிதா கொலை
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது மட்டுமல்லாமல் மாற்று திறனாளியான சித்தப்பா ராஜேஷை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிவாளை எடுத்து சுபிதாவை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

