- Home
- Tamil Nadu News
- Lost Property Documents: வீட்டு பத்திரம் தொலைஞ்சிடுச்சா? உடனே இந்த 5 விஷயங்களை செய்யணும்!
Lost Property Documents: வீட்டு பத்திரம் தொலைஞ்சிடுச்சா? உடனே இந்த 5 விஷயங்களை செய்யணும்!
Lost Property Documents: வீட்டு பத்திரம் அல்லது சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? காவல் புகார், சான்று நகல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

சொத்து பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது?
வீடு அல்லது நிலம் தொடர்பான அசல் ஆவணங்கள் தொலைவது, தீ விபத்து சேதமாவது அல்லது எதிர்பாராத காரணங்களால் காணாமல் போவது யாருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக விற்பனை, கடன் பெறுதல் அல்லது சொத்து வாரிசு தொடர்பான நடவடிக்கைகளின் போது அசல் ஆவணம் தேவைப்படலாம். ஆனால் அசல் பத்திரம் காணாமல் போனதால் மட்டும் சொத்து மீதான உரிமை இழக்கப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் விவரங்கள் அரசு பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன. எனவே, ஆவணம் தொலைந்ததை கண்டறிந்தவுடன் தாமதிக்காமல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே முக்கியம்.
வீட்டு பத்திரம் காணவில்லையா?
முதலில், எப்படித் தொலைந்தது அல்லது எங்கு காணாமல் போனது தெளிவாகத் தெரியவில்லை என்றால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். ஆவணத்தின் பெயர், பதிவு எண், சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை முடிந்தவரை புகாரில் குறிப்பிடுவது நல்லது. காவல்துறையில் புகார் அளித்ததற்கான ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆவணம் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், அதையும் புகாரில் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். பின்னர் கிடைக்கும் காவல் துறைகள், எதிர்காலத்தில் அசல் பத்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டால் முக்கிய ஆதாரமாக இருக்கலாம்.
அசல் பத்திரம் தொலைந்தது
அடுத்ததாக, ஆவணம் தொலைந்தது குறித்து பொது அறிவிப்பு வெளியிடுவது சில சூழ்நிலைகளில் பயனுள்ளதாக இருக்கும். சொந்த அடையாள விவரங்கள் மற்றும் காணாமல் போன ஆவணங்கள் குறித்து செய்தித்தாளில் அறிவிப்பு வெளியிட்டு அதன் பிரதியைப் பாதுகாத்து வைக்கலாம். மேலும், ஆவணம் காணாமல் போனது தொடர்பான விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில் வழக்கறிஞரின் ஆலோசனையுடன் உறுதிமொழிப் பத்திரம் தயாரிப்பையும் பரிசீலிக்கலாம். எதிர்காலத்தில் சொத்தை விற்பனை செய்யும்போது அல்லது வங்கிக் கடன் பெறும்போது, ஆவணம் காணாமல் போன சூழ்நிலை குறித்து கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் அத்தகைய பதிவுகள் உதவியாக இருக்கலாம்.
சொத்து ஆவணங்கள் தொலைந்தால்
மிகவும் முக்கியமான நடவடிக்கை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட சான்று நகலைப் பெறுவது. பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள் தொடர்பான பதிவுகள் அரசிடம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விதிமுறைகளுக்கு ஏற்ப விண்ணப்பித்து சான்று நகலைப் பெற முடியும். இந்தியப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவேடுகளை ஆய்வு செய்வதற்கும் சான்று நகல்களைப் பெறுவதற்கும் சட்டபூர்வ நடைமுறைகள் உள்ளன. ஆனால் சான்று நகலின் பயன்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் விதம் பரிவர்த்தனைக்கு ஏற்ப மாறக்கூடும் என்பதால், விற்பனை வங்கி அல்லது கடன் போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது சொத்து வழக்கறிஞரிடம் உறுதி செய்வது நல்லது.
வீட்டு பத்திரம் காணாமல் போனால்
ஒருவேளை உங்கள் அசல் சொத்து ஆவணங்கள் வங்கியின் பாதுகாப்பில் இருந்து தொலைந்திருந்தால், நிலைமை வேறுபடும். அப்போது உடனடியாக வங்கியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தது, எப்போது ஒப்படைக்கப்பட்டது, எப்போது காணாமல் போனது உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும். வங்கியின் அலட்சியத்தால் அசல் ஆவணங்கள் தொலைந்ததாக நிரூபிக்கப்பட்டால், பொருந்தக்கூடிய ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கிக்கான பொறுப்பு இருக்கலாம். எனவே, சொத்துக்கள் தொலைந்தால் காவல், பதிவுச் சான்றுகள், சான்று நகல் ஆவணம் மற்றும் தேவையான ஆவணச் சட்டங்களை முறையாகச் சேகரித்து வைத்திருப்பது எதிர்கால பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.

