MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெத்ததவங்க பேச்சை கேக்காமா காதல் கல்யாணம் பண்ணா இப்படி தான்! 10 மாத குழந்தையுடன் கதறும் சூரிய பிரியா!

பெத்ததவங்க பேச்சை கேக்காமா காதல் கல்யாணம் பண்ணா இப்படி தான்! 10 மாத குழந்தையுடன் கதறும் சூரிய பிரியா!

காதல் திருமணம் செய்த கணவர், 50 பவுன் நகை மற்றும் சாதிப் பிரச்சினையால் பிரிந்து சென்றதால், மனமுடைந்த மனைவி தனது கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 04 2025, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதல் திருமணம்
Image Credit : stockPhoto

காதல் திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (23) இவரும் ஆலங்காயம் வள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் சூரிய பிரியா(20) ஆகிய இருவரும் வாணியம்பாடி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரியில் பயின்று வந்தனர். அப்போது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
 பத்து மாதத்தில் ஆண் குழந்தை
Image Credit : Asianet News

பத்து மாதத்தில் ஆண் குழந்தை

இந்நிலையில் தற்போது பத்து மாதத்தில் ஆண் குழந்தை இருந்து வரும் நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு அம்மா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி காளியப்பன் தனது அம்மா வீட்டிற்கு வந்த நிலையில் 50 பவுன் நகை கொண்டு வந்தால்தான் நம் இருவரும் சேர்ந்து வாழ முடியும். மேலும் மாற்று சமூகத்தினர் என்ற காரணத்தால் எனது அம்மா உன்னுடன் வாழக்கூடாது என்று கூறுகிறார்.

Related Articles

Related image1
வீக் எண்டு அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் மின்தடை!
Related image2
எல்லாம் மறந்து போச்சா முதல்வரே! ஸ்டாலின் உங்க கைகளில் 41 உயிர்களின் ரத்தக்கறை! போட்டு தாக்கும் நயினார்!
34
கொலை மிரட்டல்
Image Credit : Asianet News

கொலை மிரட்டல்

தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக காளியப்பன் தனது காதல் மனைவியான சூரிய பிரியாவிடம் கூறியதன் காரணமாக அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சூரிய பிரியா கடந்த செப்டம்பர் 4ம் தேதி காதலன் வீட்டின் முன்பு காதல் கணவரை சேர்த்து வைக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 15 நாட்கள் கழித்து தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து சூரியபிரியா காளியப்பனின் மாட்டு கொட்டையில் கை குழந்தையுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காளிமுத்துவின் உறவினர் ரவி என்பவர் சூரிய பிரியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

44
தீக்குளிக்க முயற்சி
Image Credit : Asianet News

தீக்குளிக்க முயற்சி

மேலும் சூரிய பிரியா நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இருப்பினும் காளிமுத்து சேர்ந்து வாழ மறுக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சூரிய பிரியா கணவனோடு சேர்த்து வைக்கக் கோரி நாட்றம்பள்ளி காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பின்னர் காவலர்கள் சூரிய பிரியாவை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் காரணமாக கலைந்து சென்றார். காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெண்கள்
காவல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image2
Tamilnadu Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image3
Now Playing
திமுகவுடன் ஆட்சி என்று யாரும் சொல்லவில்லை...MLA காமராஜ் சொல்லுவது எல்லாம் பொய்! TTV தினகரன் பேட்டி
Related Stories
Recommended image1
வீக் எண்டு அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் மின்தடை!
Recommended image2
எல்லாம் மறந்து போச்சா முதல்வரே! ஸ்டாலின் உங்க கைகளில் 41 உயிர்களின் ரத்தக்கறை! போட்டு தாக்கும் நயினார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved