MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்னது பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? தமிழக அரசு சொல்வது என்ன?

என்னது பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? தமிழக அரசு சொல்வது என்ன?

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 9ம் தேதி திறப்பு தள்ளிப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. 

1 Min read
vinoth kumar
Published : May 31 2025, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கோடை விடுமுறை
Image Credit : Google

கோடை விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 24ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடுமையான வெயிலின் சுட்டெரித்து வந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் பேசி அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

24
வழிகாட்டு நெறிமுறைகள்
Image Credit : Asianet News

வழிகாட்டு நெறிமுறைகள்

ஆனால், எப்போதும் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதம் இறுதியில் தொடங்கியதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெயின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் திட்டமிட்டப்படி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடப்பட்டது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Articles

Related image1
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இலவசமாகவே பயணிக்கலாம்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Related image2
மாணவர்களே இதுதான் லாஸ்ட் சான்ஸ்! தேர்வுகள் இயக்ககம் சொன்ன முக்கிய தகவல்!
34
சமூக வலைதளங்களில் வைரல்
Image Credit : our own

சமூக வலைதளங்களில் வைரல்

ஆனால் நேற்று முதல் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாகவும் அதாவது ஜூன் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலானது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

44
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு
Image Credit : our own

தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரியவந்துள்ளது. ஆகையால் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளி
பள்ளிக் கல்வித் துறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved