MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆதவ், புஸ்ஸி ஆனந்தை நம்பி பயனில்லை! ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை களமிறக்கும் விஜய்! அதிரடி முடிவு!

ஆதவ், புஸ்ஸி ஆனந்தை நம்பி பயனில்லை! ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளை களமிறக்கும் விஜய்! அதிரடி முடிவு!

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழுவை விஜய் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

2 Min read
Rayar r
Published : Oct 31 2025, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
30 நாட்களுக்கு பிறகு உயிர்ப்பித்த தவெக
Image Credit : our own

30 நாட்களுக்கு பிறகு உயிர்ப்பித்த தவெக

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு சுமார் 30 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரில் செல்லாமல் மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் தெரிவித்த விஜய், மீண்டும் கட்சி பணிகளில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். தவெகவின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை அமைத்த விஜய், நிர்வாகக்குழு கூட்டத்தையும் உடனே கூட்டினார்.

24
பழைய பார்முக்கு திரும்பும் விஜய்
Image Credit : Asianet News

பழைய பார்முக்கு திரும்பும் விஜய்

மேலும் வரும் 5ம் தேதி தவெக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்து விரக்தியில் இருந்த தொண்டர்களுக்கு தெம்பூட்டியுள்ளார். அத்துடன் பழைய பார்முக்கு திரும்பி, நெல் கொள்முதல் சரிவர செய்யாத திமுக அரசை கடுமையாக விளாசித் தள்ளியுள்ளார். இப்படியாக தவெக மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், விஜய் பழையபடி எப்பொது மக்களை சந்திக்க போகிறார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் குழு

கரூர் சம்பவத்தை போல் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள விஜய், மக்களை சந்திப்பை திட்டமிட்டு மிகவும் கவனமுடன் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். இதனால் தவெக பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திட்டமிட ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Related image1
அதிமுகவில் இருந்து நீக்கப்படும் செங்கோட்டையன்! சிதறப்போகும் வாக்கு வங்கி! தட்டித்தூக்க தயாராகும் விஜய்.. பாஜக!
Related image2
இபிஎஸ் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்..! ஒரே வார்த்தையில் மொத்தமாக முடிச்சு விட்ட தவெக!
34
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அனுபவமின்மை
Image Credit : Asianet News

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அனுபவமின்மை

விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததன் விளைவாகத் தான் கரூரில் 41 உயிர்கள் பறிபோனது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் சரியான திட்டமிடல் இல்லாததும் கரூர் சம்பவத்துக்கு முக்கிய காரணம். திமுக, அதிமுக என பெரிய கட்சிகளை போல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் அனுபவம் அவர்களுக்கு இல்லாததும் வெட்டவெளிச்சமானது.

அனுபவமிக்க காவல் அதிகாரிகள்

இதனால் தான் விஜய் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி அடங்கிய அதிகாரிகள் குழுவை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போலீஸ் அதிகாரிகளை பொறுத்தவரை தாங்கள் பணிபுரிந்த காலத்தில் திமுக, அதிமுக என பெரும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். எந்தெந்த கட்சிகளின் கூட்டங்களுக்கு எத்தனை பேர் வருவார்கள்? எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும்? உணர்ச்சிமிக்க தொண்டர்களை கட்டுப்படுத்துவது எப்படி? போன்ற அனுபவங்களை பெற்றிருப்பார்கள்.

44
திட்டமிட்டு செயல்படும் விஜய்
Image Credit : Asianet News

திட்டமிட்டு செயல்படும் விஜய்

திமுக, அதிமுகவில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களே கூட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருப்பார்கள். ஆனால் தவெகவில் அத்தகைய தலைவர்கள் இல்லாததும், தன்னை பார்க்க வரும் இளைஞர்களை கட்டுப்படுத்தும் சிரமத்தை அறிந்தும்தான் அனுபவம்வாய்ந்த காவல்துறை அதிகாரிகளை களமிறக்குறார் விஜய்.

விரைவில் வெளியாகும் அறிவிப்பு

இந்த அதிகாரிகளின் சரியான, தெளிவான திட்டமிடல் மூலம் பொதுக்குழு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தேவையில்லாத பிரச்சனையை தவிர்க்க முடியும் என விஜய் நினைக்கிறார். இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் அடங்கிய குழு குறித்த அறிவிப்பை விஜய் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
அரசியல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved