MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மழையின் ஆட்டம் இனிமே தான் இருக்காம்! சென்னையே அலறப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் டேஞ்சர் அலர்ட்!

மழையின் ஆட்டம் இனிமே தான் இருக்காம்! சென்னையே அலறப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் டேஞ்சர் அலர்ட்!

வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை முதல் புதுச்சேரி வரை இன்று முதல் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 29 2024, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu Heavy Rain

Tamilnadu Heavy Rain

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் உருவான முதல் புயலான ஃபெங்கல் புயல் போக்கு காட்டி வந்தது. முதலில் புயல் வலுவடையாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.  ஆனால் தற்போது மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

24
Cyclone Fengal

Cyclone Fengal

அதாவது வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக உருவாகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு  8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருகோணமலைக்கு வடக்கு வடகிழக்கே சுமார் 270 கி.மீ., நாகைக்கு கிழக்கே 300 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 340 கி.மீ.,  சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

34
Tamilnadu Weatherman

Tamilnadu Weatherman

இந்நிலையில் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் இன்று மாலை அல்லது இரவு முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

44
Tamilnadu Weatherman Pradeep John

Tamilnadu Weatherman Pradeep John

இந்த புயல்  சென்னை முதல் புதுச்சேரி பெல்ட் வரை மிக மிக கனமழையைக் கொடுக்கப் போகிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளார். எனவே, விழிப்புடன் இருங்கள் என்றும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூறாவளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.5,000 சம்பளம் உயர்வு! யாருக்கெல்லாம்? சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Recommended image3
இன்றும் தரமான சம்பவம் இருக்காம்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved