MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து! 6 பேர் பலி! 16 பேர் படுகாயம்! நடந்தது என்ன?

திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து! 6 பேர் பலி! 16 பேர் படுகாயம்! நடந்தது என்ன?

Ulundurpet Van Accident: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 25 2024, 08:26 AM IST| Updated : Sep 25 2024, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thiruchendur Murugan Temple

Thiruchendur Murugan Temple

ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்துள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்களது வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதையும் படிங்க: Durai Dayanidhi: முதல்வர் ஸ்டாலினுக்கு போன தகவல்! 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி! வைரலாகும் போட்டோ!

24
Van Accident

Van Accident

இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்  விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

34
Police investigation

Police investigation

மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க:  Government School Teacher: சம்பளத்தில் கை வைத்த பள்ளிக்கல்வித்துறை! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்! நடந்தது என்ன?

44
Impact of traffic

Impact of traffic

இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved