MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் எகிறும் பிரஷர்! மத்திய மாநகர தவெக செயலாளரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்!

தமிழகத்தில் எகிறும் பிரஷர்! மத்திய மாநகர தவெக செயலாளரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்!

கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் மற்றும் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 30 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தவெக விஜய்
Image Credit : Asianet News

தவெக விஜய்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸ் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

23
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கைது
Image Credit : our own

கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கைது

இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. மேலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Related Articles

Related image1
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..! விஜய் கட்சி கொடி கம்பம்... விஜய் உருவம் இடித்து தகர்ப்பு..
Related image2
அடடடா! கரூரில் அழுது புலம்பிய 'அந்த' அமைச்சருக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்! சொல்வது யார் தெரியுமா?
33
கரூர் நகர பொறுப்பாளர் கைது
Image Credit : Asianet News

கரூர் நகர பொறுப்பாளர் கைது

இந்நிலையில் தவெகவை சேர்ந்த மற்றொரு நிர்வாகியை போலீஸ் கைது செய்துள்ளது. பிரசாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் பவுன்ராஜ் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கரூர் நகர காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
திமுக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved