MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கிய அமைச்சர் சிவசங்கர்! அரசு பேருந்தை விரட்டி மடக்கி என்ன செய்தார் தெரியுமா?

வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கிய அமைச்சர் சிவசங்கர்! அரசு பேருந்தை விரட்டி மடக்கி என்ன செய்தார் தெரியுமா?

தமிழக போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன், ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Jul 21 2025, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

தமிழகத்தில் தலைநகர் சென்னை முதல் குக் கிராமங்கள் வரை அரசு பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 20,000க்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டிஎன்எஸ்டிசி, எஸ்இடிசி, எம்டிசி வகையான பேருந்துகள் உள்ளன. இதில், விழுப்புரம், மதுரை, கும்பகோணம், கோவை, சேலம் என எட்டு போக்குவரத்துக் கழகங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறையின் அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது அவருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

24
Image Credit : X/Sivasankar

குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும், அமாவாசை, பவுர்ணமி பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுகிறது. மேலும் தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைக் குறைப்பது மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு கள ஆய்வுகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார். கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Related Articles

Related image1
பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு! அதிமுக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய முதல்வர் ஸ்டாலின்!
Related image2
ஏம்மா இருக்கிற பிரச்சினை போதாதா! கோர்த்துவிட்ட பெண் நிர்வாகியால் பதறிய நயினார் நாகேந்திரன்! நடந்தது என்ன?
34
Image Credit : X/Sivasankar

அதேபோல நள்ளிரவு நேரங்களில் அரசுப் பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் சுங்கச்சாவடி அருகே அரசு பேருந்துகளை போக்குவரத்து கழகங்களின் சார்பில் ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் நிறுத்தாமல் தங்களுக்கு விருப்பமான இடத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிறுத்தியதை கண்டு எச்சரித்தார்.

44
Image Credit : X/Sivasankar

இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அடுத்து சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பெயர் பலகை இல்லாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் அறிவுரை வழங்கி, ஆம்னி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் அதனை எடுக்குமாறு ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தியதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
திமுக

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved