வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு! தமிழ்நாடு தின வாழ்த்து செய்திகள் இதோ..
ஜூலை 18-ம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்திகளை அனுப்பி நீங்களும் தமிழ்நாடு தினத்தை கொண்டாடுங்கள்.
india map
1947-ம் ஆண்டு இந்தியா விடுதலையான பிறகு, மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தின் சில பகுதிகள் ஹைதராபாத், திருவிதாங்கூர், மைசூர் மாகாணங்களின் பகுதிகளுடன் இணைக்கப்பட்டன.
ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் புதிதாக உருவாகின. எஞ்சிய பகுதிகளை கொண்டு நமது சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1967 ஜூலை 18-ம் தேதி முதலமைச்சர் சி.என். அண்னாதுறை சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அனைத்து கட்சி ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேறியது. எனவே நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ம் தேதியே தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதன்படி ஜூலை 18-ம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நாள் வாழ்த்து செய்திகளை அனுப்புங்கள்
தமிழ்நாடு நாளான இன்று, தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் என்ற இந்த வாழ்த்து செய்தியை அனுப்பலாம்.
உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை இவ்வுலகிற்கு தந்தவர் திருவள்ளுவர். தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.
உலக மொழிகளில் பலவற்றுக்கு எழுத்து, மொழி, யாப்பு, அணி ஆகியவை உண்டு. தமிழ் மொழிக்கு மட்டும் தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்தும் வாழ்த்து செய்தியை அனுப்பலாம்.
கல்தோன்றி, மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழினம். தமிழர்களின் தமிழ்நாடு தின வாழ்த்துக்கள்.