MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புளிய மரத்தில் மோதி கார் விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! மகள் சீரியஸ்!

புளிய மரத்தில் மோதி கார் விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! மகள் சீரியஸ்!

கேரளாவில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்த குடும்பத்தினர் மீது கார் விபத்து ஏற்பட்டது. இதில் கணவன், மனைவி மற்றும் மூத்த மகள் உயிரிழந்தனர். இளைய மகள் படுகாயமடைந்தார்.

1 Min read
vinoth kumar
Published : May 20 2025, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேரளாவில் இருந்து திரும்பிய போது விபத்து
Image Credit : Google

கேரளாவில் இருந்து திரும்பிய போது விபத்து

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46). இவரது மனைவி ஜானகி (40). இவர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 2 மகள்கள் ஹேமிநேத்ரா (15), மௌன ஸ்ரீ (10). இவர்கள் நவரசம் பள்ளியில் 10 மற்றும் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவமனை குவாட்டர்ஸில் வசித்து வந்துள்ளனர்.

24
புளிய மரத்தில் மோதிய கார்
Image Credit : our own

புளிய மரத்தில் மோதிய கார்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று காரில் ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

Related Articles

Related image1
அரசு பேருந்தின் டயர் வெடித்து கழன்று ஓடிய திகில் சம்பவம்! அலறிய 55 பயணிகளின் நிலை என்ன?
Related image2
அட கடவுளே! இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங்க! ஐயோ என்னை விட்டு போயிட்டியே கதறும் பெற்றோர்கள்!
34
 கார் விபத்தில் 3 பேர் பலி
Image Credit : Google

கார் விபத்தில் 3 பேர் பலி

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராஜா, அவரது மனைவி ஜானகி, மூத்த மகள் ஹேமிநேத்ரா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மௌன ஸ்ரீ உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44
தூக்க கலக்கத்தில் விபத்து?
Image Credit : our own

தூக்க கலக்கத்தில் விபத்து?

மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தூக்க கலக்கத்தில் விபத்து நிகழ்ந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved