MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மழை எப்போது பெய்ய தொடங்கும்.! இரவில் காத்திருக்கிறது மர்மம் .! லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வெதர்மேன்

மழை எப்போது பெய்ய தொடங்கும்.! இரவில் காத்திருக்கிறது மர்மம் .! லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வெதர்மேன்

வட தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 16, 17 தேதிகளில் மிக கனமழைக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Oct 14 2024, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamilnadu rain

Tamilnadu rain

சென்னையை அச்சுறுத்தும் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கி கிடந்த நிலையில் வானிலை அப்படியே முழுவதுமாக மாறியுள்ளது. எப்போதும் டிசம்பர் மாதம் சென்னை மக்களை அச்சுறுத்தும் மழை தற்போது அக்டோபர் மாதமே அச்சமடைய வைத்துள்ளது. அந்த வகையில் வட தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபி கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும், வங்க கடலில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24
tamilnadu rain

tamilnadu rain

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

இன்று தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து  வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ( 15 ,16 தேதிகளில்)  நாளை மற்றும் நாளை மறுதினம்  வட தமிழகம், புதுவை  மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. 

34
tamilnadu rain

tamilnadu rain

இன்று மழை குறைவு- நாளை நாள் முழுவதும் மழை

இந்தநிலையில் இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்,  வட தமிழ்நாட்டின் மேல் மேகக் கூட்டங்கள் உருவானதால் சென்னையில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இன்று மழை ஒரு ஆரம்பம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

பகல் நேரத்தில் மழைக்கு இடைவெளி இருக்கும். இரவு முதல் அதிகாலை வரை மழை உச்சபட்சமாக பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதி  நம்மை நெருங்கும் போது  நாள் முழுவதும் மழை பெய்யக்கூடும்.  இன்றைய தினத்தில்  இடைவேளையுடன் மழை இருக்கும், மழை பெய்தாலும் பாதுகாப்பாக அலுவலகம் செல்லலாம். சூரியன் பகலில் சிறிது சிறிதாக வரலாம், பின்னர் திடீர் மறையலாம் என தெரிவிதுள்ளார்.  

44
<p>weather man</p>

<p>weather man</p>

பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லலாம்

மிகக் கடுமையான மழையின் பெய்ய உள்ள தேதியையும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன் படி, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அக்டோபர் 16-ம் தேதி சென்னை கடற்கரையை நெருங்கும் என்றும், 16 முதல் 17-ம் தேதி மிக கனமழைக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே குழந்தைகள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் இன்று பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்லலாம் என பிரதீப் ஜான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Heavy Rain: சென்னை, கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: பள்ளிகளுக்கு லீவு?

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காதலி.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 4 போலீஸ் சஸ்பெண்ட்
Recommended image2
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த இலங்கை படை.. 8 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. செல்வப்பெருந்தகை கண்டனம்
Recommended image3
ஆட்சியின் கடைசி நிமிடம் வரை கொள்ளையடிப்பது தான் கொள்கையா.? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் அன்புமணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved