MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளுக்கு கொத்து கொத்தாக வெளியான 22 அறிவிப்பு.! தமிழக அரசு அசத்தல்

விவசாயிகளுக்கு கொத்து கொத்தாக வெளியான 22 அறிவிப்பு.! தமிழக அரசு அசத்தல்

தமிழக அரசு விவசாய நலனுக்காக 22 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையங்கள், ஆய்வகங்கள், குளிர் பதன கிடங்குகள் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

3 Min read
Ajmal Khan
Published : Apr 03 2025, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழக அரசின் வேளாண்மை திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் 22 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

1. வேளாண்மை உழவர் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் ஆலோசனைகளையும் தரமான வேளாண் இடு பொருட்களையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்று பயனடைய ஏதுவாக விழுப்புரம் மாவட்டம் மயிலம், கண்டமங்கலம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய 7  ஒருங்கிணைந்த வேளாண்மை தமிழ்நாடு விரிவாக்க மையங்கள் 25.3 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்

28

விவசாயிகளுக்கு தரமான விதைகள்

2. ரசாயன புரங்களின் தரத்தினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தரமான விவரங்கள் கிடைப்பது உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

3. வேளாண் விளைபொருள்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் நிலப்பினை குறைத்து சேமிப்பு காலத்தை நீட்டிக்கும் வகையில் திசையன்விளை மானாமதுரையில் குளிர் பதன கிடங்கு வசதிகள் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் 

4. தரமான விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு அருகாமையில் கிடைக்க செய்யும் வகையில் குறுவட்ட அளவில் செயல்படும் ஐந்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மூன்று கோடி 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விதை சேமிப்பு கிடங்குகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் 

38
வேளாண்மை

வேளாண்மை

தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள்

5. வேளாண்மை பொறியியல் துறையின் இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்து வட்டார அளவில் விவசாயிகளுக்கு சேவை வழங்கிட ஏதுவாக வேளாண் இயந்திர கூடாரங்கள்  15 வட்டாரங்களில் மூன்று கோடியே முப்பது லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் 

6. தமிழ்நாட்டில் உள்ள 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் அவற்றை கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்னணு வருகை பதிவேடு இயந்திரங்கள் 2 கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் 

7. விவசாயிகளுக்கு தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் தஞ்சாவூரில் இயங்கி வரும் உயிரியல் பூச்சிக்கொல்லி உற்பத்தி மையத்தில் புதிய கட்டிடம் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் 

48

மாம்பழக் கூழ் தயாரிப்புக்கூடம்

8. காய்கறி நாற்றுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டு நாற்றங்கால் கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும்

9. அதிக வரத்து காலங்களில் மாம்பழங்கள் வீணாவதை தடுத்து விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏதுவாக வங்கி கடன் உதவியுடன் மாம்பழக் கூழ் தயாரிப்புக்கூடம் அமைக்க எட்டு நபர்களுக்கு தலா 12.22 லட்சம் விதம் மானியம் வழங்க 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 

10. விவசாயிகளின் வகைகளுக்கு நேரடியாக சென்று மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து மண்வள அட்டைகளுடன் பயிர்களுக்கு ஏற்ப உர பரிந்துரைகள் வழங்கும் மதிய 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நடமாடு மண் பரிசோதனை நிலையம் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படும்

58

வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மையம்

11. சிறுகுறி விவசாயிகளின் சிறிய இயந்திரங்களுக்கான தேவை என கருத்தில் கொண்டு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் கருவிகள் உபகரணங்களை அரசு இயந்திர கலப்பை பணிமனைகளில் உருவாக்கி அவை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கங்கள் அளிக்கப்படும் இதற்கென 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

12. விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க ஏதுவாக சேலத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் புதிய வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மையம் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் 

13. சிறுதானியங்கள் நிலக்கடலை பல ஆகியவற்றின் விற்பனை ஏற்றுமதி அதிகரித்திட விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தொடர்பான பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்பு கூட்டம் நடத்தப்படும்

68

500 விவசாயிகளுக்கு விழிப்புணர் பயிற்சி

14. விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்று விதைகள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கிடப்பதை உறுதி செய்ய ஒருங்கிணைந்து தரகட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும்

15. தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி மற்றும் தென்னையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் குறித்து ஆயிரம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் 

16. மாமரங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து மா விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாமரங்களில் கவாத்து செய்வது குறித்து செயல் விளக்க விழிப்புணர் பயிற்சி 500 விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 

78

500 படித்த இளைஞர்களுக்கு பயிற்சி

17. தோட்டக்கலை பயிர்கள், மலைப் பயிர்களில் சாகுபடி மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் சந்தை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் 

18. உழவர்கள் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரம் நபர்கள் பயன்பெறும் வகையில் வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் இயந்திரம் இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சிகள் அளிக்கப்படும்

19. சென்னை மாநில வேளாண் இயந்திரங்கள் தகவல் மையத்தில் தொழில் முனைவோர் வாய்ப்புகளுக்கான வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்கள் குறித்து 500 படித்த இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்

88

நுண்ணீர் பாசன அமைப்பு

20. வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையால் வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்தான முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்

21. புதிதாக கண்டுபிடிக்கப்படும் நவீன வேளாண் பொறியியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்திட 50 செயல் விளக்கங்கள் மேற்கொள்ளப்படும்

22. 1500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் நுண்ணீர் பாசன அமைப்புகளின் பராமரிப்பு குறித்த செயல் விளக்க பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
விவசாயம்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு சட்டமன்றம்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved