MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சட்டமன்ற தேர்தலால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலால் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா.? அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Ajmal Khan
Published : Oct 25 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்து 5 ஆம் ஆண்டியில் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. 

கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சும் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. இதனை தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும்.

23
Image Credit : our own

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்கி 3வது வாரம் முடிவடையும். இதனை தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3வது வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும். 

இந்த சூழலில் தேர்தல் வாக்கு பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் ஆசியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளனர். இதே போல தேர்தல் பிரச்சாரத்தால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதும் பாதிக்கப்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதியை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வந்தாச்சு புதிய விதி!
Related image2
சொந்த ஊரிலேயே வேலை.! தினமும் ரூ.750 சம்பளம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
33
Image Credit : Google

அந்த வகையில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி பொதுத்தேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். 

சென்னை தரமணியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில், நவம்பர் 4ஆம் தேதி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பள்ளி மாணவர்
கல்வி
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்..! முதல்வர் பெருமிதம்
Recommended image2
வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image3
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Related Stories
Recommended image1
இனி அரசு ஊழியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! வந்தாச்சு புதிய விதி!
Recommended image2
சொந்த ஊரிலேயே வேலை.! தினமும் ரூ.750 சம்பளம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved