MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரும்பு கொள்முதல் விலை.! விவசாயிகளுக்கு குட் நியூஸா.? தமிழக அரசிதழில் வெளியான முக்கிய தகவல்

கரும்பு கொள்முதல் விலை.! விவசாயிகளுக்கு குட் நியூஸா.? தமிழக அரசிதழில் வெளியான முக்கிய தகவல்

2024-25 கரும்பு கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சர்க்கரை ஆலைகளின் திறன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 04 2025, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகள் அதற்கான கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில்  பஞ்சாபில் ஒரு டன் கரும்பு விலை ரூ.4100 ஆக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரும்பு விலை ரூ.3150 மட்டுமே வழங்கப்படுகிறது.

25

எனவே  ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மனிதவளம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரிப்பு போன்ற நடைமுறை சவால்களாலும் மற்ற பயிர்களைப் போலவே கரும்பு சாகுபடிக்கான செலவும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 12 சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும், 16 தனியார் சர்க்கரை ஆலைகளும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

35

மத்திய ‌அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையின் அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டு பருவத்திற்கு, கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3151 நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கரும்பை பொறுத்த வரையில் ஒவ்வொரு பருவத்திற்கும் கொள்முதல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்யும். அந்தவகையில், சர்க்கரை ஆலை வாரியாக கரும்பின் திறன் அடிப்படையில் இந்த கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

45
Sugarcane

Sugarcane

இதன்படி, 9.50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவானத்  சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு  3ஆயிரத்து 151  ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  9.85 சதவீத சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு  3ஆயிரத்து 267 ரூபாயாகவும், 10.10 சதவீத சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 3ஆயிரத்து 344.20 ரூபாயாகவும்  10.65 சதவீத  சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு 3ஆயிரத்து 532.80 ரூபாயாகவும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

55
Sugarcane

Sugarcane

மத்திய அரசு தற்போது விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரும்பு டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக 215 ரூபாய் வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி.. 6 நாட்களுக்குள் முடிக்க ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு
Recommended image2
Now Playing
மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
Recommended image3
Now Playing
வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved