MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! என்ன காரணம்?

அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! என்ன காரணம்?

தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளத்தில் வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Dec 17 2024, 09:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எமிஸ்

எமிஸ்

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

24
களஞ்சியம் செயலி

களஞ்சியம் செயலி

விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையும், செப்டம்பர் மாதம் ஊதியமும் மற்றும் போனஸ் ஆகியவை ஒரே தொகையாக அரசு ஊழியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

34
வருமான வரி

வருமான வரி

இதனால் வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அக்டோபர் மாதம் சம்பளத்திலும் வருமான வரி தொகையையே பிடித்தம் செய்ததால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

44
அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

இதனால், வருமான வரித்துறையில் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப பெறுவதில் 6 மாதம் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக டிசம்பர் மாதத்திற்கான சம்பள பட்டியல் தயாரிக்கும் அனைத்து துறை அலுவலரும் இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்த பின் சம்பளத்திற்குரிய வருமான வரியை மட்டுமே பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சபரீசனுக்கே விபூதியடித்த திமுக அமைச்சர்கள்..! பென் டீமுக்கு பணம் கொடுத்து தகிடு தத்தோம்..! ஏமாற்றப்படும் அறிவாலயம்..!
Recommended image2
சிஆர்பிஎஃப் படையினரை தடுத்த தமிழக காவல்துறை..! காவலர்கள் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்!
Recommended image3
தீபம் ஏற்றும் விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் திடீர் 144 தடை உத்தரவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved