MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திடீர் திருப்பம்! SIT விசாரணை! தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! என்ன காரணம்?

திடீர் திருப்பம்! SIT விசாரணை! தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! என்ன காரணம்?

TVK Vijay, Supreme Court கரூரில் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

1 Min read
vinoth kumar
Published : Oct 08 2025, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக தலைவர் விஜய்
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

24
சிறப்பு புலனாய்வு குழு
Image Credit : istock

சிறப்பு புலனாய்வு குழு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலியானது தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார். இதனையடுத்து கரூரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறது.

Related Articles

Related image1
போடுறா வெடிய.. கொத்தாக 10 நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!
Related image2
கமலின் சங்கை அறுப்பேன்! கொ** ல மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்! கோர்ட் அதிரடி சரவெடி!
34
ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு
Image Credit : x/Aadhav Arjuna

ஆதவ் அர்ஜுனா மேல்முறையீடு

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கரூர் விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக் கொண்டு வர வேண்டும். உரிய விசாரணை நடைபெற வேண்டும் என்றால் சிறப்புக்குழு விசாரணை மூலம் முறையாக நடைபெறாது. ஆகையால் SIT விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

44
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
Image Credit : Getty

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி இன்று காலை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் தவெக முறையிட உள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு
உச்ச நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved