MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அட்வான்ஸாக என்ட்ரி கொடுக்கும் பருவமழை; வானிலை ஆய்வும் மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

அட்வான்ஸாக என்ட்ரி கொடுக்கும் பருவமழை; வானிலை ஆய்வும் மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

Tamil Nadu Monsoon : தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட இந்த முறை முன்கூட்டியே பருவமழை துவங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 Min read
Ansgar R
Published : Oct 06 2024, 12:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil nadu monsoon

Tamil nadu monsoon

தமிழகத்தை பொறுத்தவரை பொதுவாக பருவமழை என்பது அக்டோபர் மாத இறுதியில் தான் துவங்கும். ஆனால் இந்த முறை அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வார இறுதியில் இருந்தே, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை காலம் துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. தமிழகம் மற்றும் ஆந்திர எல்லை பகுதிகளுக்கு நல்ல பலனை கொடுக்கும் அளவிற்கு இந்த பருவ மழை பெய்ய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

Special Train: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! தொடர் விடுமுறை! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

24
Tamil Nadu Rains

Tamil Nadu Rains

நாளை அக்டோபர் 6ம் தேதி தமிழகத்தின் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய, லேசானது முதல் அதிக கனத்த மழை வரை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றும் சென்னையின் பல இடங்களிலும் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், உள்ளிட்ட பகுதிகளிலும் மாலை நேரத்தில் கன மழை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் அனேக இடங்களிலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் அதிக கனத்த மழையும் பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

34
Northeast Mansoon

Northeast Mansoon

தொடர்ச்சியாக அக்டோபர் 10ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யும் நிலையில், அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவ அதிக வாய்ப்புள்ளது என்றும், சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தமிழகத்திற்கான வடகிழக்கு பருவ மழை காலம் துவங்க உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு இதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பருவமழை துவங்க உள்ளதால், அதற்காக எடுக்கப்படும் முன்னேற்பாடுகள் குறித்து இன்று சென்னையில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சில அறிக்கைகளை வெளியிட்டார்.

44
deputy chief minister

deputy chief minister

அதில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட அதிகம் பெய்ய வாய்ப்புகள் இருப்பதால், மரம் வெட்டும் உபகரணங்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும். மழைநீர் தேங்கும் என்று கணிக்கப்படும் இடங்களில், அவற்றை உடனடியாக அகற்ற தேவைப்படும் மோட்டார்கள் மற்றும் அங்குள்ள மக்களை மீட்க தேவையான படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் ஒவ்வொரு வார்டிலும் உள்ள உறுப்பினர்கள் வாட்ஸ்-அப் குழு ஒன்றை உருவாக்கி, அதில் தன்னார்வலர்களை இணைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TN Alert: இனி மழை, வெள்ளம் குறித்து கவலை வேண்டாம்! தமிழக மக்கள் முன்கூட்டியே அறிய புதிய செயலி!

About the Author

AR
Ansgar R
சென்னை
வானிலை அறிக்கை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved