MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்களுக்கு ஷாக்.! தேர்வு திடீர் ஒத்திவைப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்.! தேர்வு திடீர் ஒத்திவைப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வு மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 6ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Nov 28 2025, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஊரகத் திறனாய்வு தேர்வு
Image Credit : ANI

ஊரகத் திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

24
கல்வி உதவித்தொகை
Image Credit : our own

கல்வி உதவித்தொகை

அதன்படி நடப்பாண்டுக்கான ஊரக திறனாய்வு தேர்வு நவம்பர் 29ம் தேதி அதாவது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் ஹால்டிக்கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related Articles

Related image1
புருஷனுக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கிவிட்டு கள்ளக்காதலனுடன் பரிமளா பார்த்த பலான வேலை! இறுதியில் நடந்த பயங்கரம்
Related image2
குரூப் 2A முதன்மை தேர்வு எழுத போறீங்களா? குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு! டிசம்பர் 1ம் தேதி முதல்!
34
ஹால் டிக்கெட்
Image Credit : our own

ஹால் டிக்கெட்

ஹால் டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால் டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் டிட்வா' புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

44
அரசு தேர்வுகள் இயக்ககம்
Image Credit : Google

அரசு தேர்வுகள் இயக்ககம்

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 6ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் மீது பாஜக சாயம் பூசும் திருமா..! திமுகவை விட காழ்ப்புணர்ச்சி..! பதறும் பின்னணி..!
Recommended image2
இனியும் வெயிட் பண்ணக்கூடாது.. கோபிசெட்டி பாளையத்தில் களம் இறங்கும் இபிஎஸ்..
Recommended image3
புருஷனுக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கிவிட்டு கள்ளக்காதலனுடன் பரிமளா பார்த்த பலான வேலை! இறுதியில் நடந்த பயங்கரம்
Related Stories
Recommended image1
புருஷனுக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கிவிட்டு கள்ளக்காதலனுடன் பரிமளா பார்த்த பலான வேலை! இறுதியில் நடந்த பயங்கரம்
Recommended image2
குரூப் 2A முதன்மை தேர்வு எழுத போறீங்களா? குட்நியூஸ் சொன்ன தமிழக அரசு! டிசம்பர் 1ம் தேதி முதல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved