MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமைத் தொகை! பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு! தமிழக அரசின் சர்ப்ரைஸ்!

மகளிர் உரிமைத் தொகை! பெண்களுக்கு வரப்போகும் குஷியான அறிவிப்பு! தமிழக அரசின் சர்ப்ரைஸ்!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசு குஷியான அறிவிப்பை வெளியிட உள்ளது. 

1 Min read
Rayar r
Published : Aug 27 2025, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil Nadu Magalir Urimai Thogai Scheme Update 2025
Image Credit : tndipr

Tamil Nadu Magalir Urimai Thogai Scheme Update 2025

தமிழக அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் என்ற பெயரில் குடும்ப அட்டை வைத்துள்ள, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பிட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரைத் தவிர மற்ற குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

24
மகளிர் உரிமைத் தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமைத் தொகை

அண்மையில் சில மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறிப்பிட்ட ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியான பெண்கள் இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் என்றும் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் வசிக்கும் 19,487 இலங்கைத் தமிழர்களும் இத்திட்டத்தில் இணையலாம் எனவும் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர்.

Related Articles

Related image1
ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை! கிடைக்குமா.? கிடைக்காதா.? தெரிந்து கொள்ள ஈஸியான வழி இதோ!
Related image2
மகளிர் உரிமைத்தொகை கேட்டு 6 லட்சம் புதிய விண்ணப்பங்கள்.! எப்போது 1000 ரூபாய் கிடைக்கும்.?
34
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள்
Image Credit : Google

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிய விண்ணப்பங்கள்

புதிதாக விண்ணப்பித்தவரளின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு மாதமாக மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. குறிப்பாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன. விண்ணப்பித்தவர்களுக்கு 45 நாட்களுக்குள் பதில் வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த காலக்கெடு நாளையுடன் (ஆகஸ்ட் 28ம் தேதி) முடிவடைகிறது.

44
அடுத்த 24 மணி நேரத்தில் தகவல் வரலாம்
Image Credit : magalir urimai thogai

அடுத்த 24 மணி நேரத்தில் தகவல் வரலாம்

ஆகவே முதன் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி மூலம் பதில் அனுப்பப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in/என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved