MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமைத்தொகை கேட்டு 6 லட்சம் புதிய விண்ணப்பங்கள்.! எப்போது 1000 ரூபாய் கிடைக்கும்.?

மகளிர் உரிமைத்தொகை கேட்டு 6 லட்சம் புதிய விண்ணப்பங்கள்.! எப்போது 1000 ரூபாய் கிடைக்கும்.?

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன, இதில் 5.88 லட்சம் மனுக்கள் மகளிர் உரிமை தொகை கோரியவை. 

2 Min read
Ajmal Khan
Published : Jul 29 2025, 01:25 PM IST| Updated : Jul 29 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகளிர் உரிமை தொகை
Image Credit : tndipr

மகளிர் உரிமை தொகை

தமிழக அரசு மகளிர் உரிமை தொகையானது கடந்த 2023ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாயை உரிமை தொகையாக ஒரு கோடி மகளிர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் எப்போது வழங்கப்படும் என மக்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், 

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் கடந்த 15ம் தேதி தொடங்கி வைத்தார்.

24
உங்களுடன் ஸ்டாலின்
Image Credit : tndipr

உங்களுடன் ஸ்டாலின்

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழான, முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருகிறது. மற்ற விண்ணப்பங்கள் மீது அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு,

Related Articles

Related image1
15 ஆயிரம் ரூபாய் முழு உடல் பரிசோதனை ஒரு ரூபாய் செலவு இல்லாமல்.! ஆகஸ்ட் 2 முதல் வீடு தேடி வருது
Related image2
மாதம் 3 லட்சம் சம்பளம்.! செவிலியர்களுக்கு சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு சொன்ன முக்கிய அறிவிப்பு
34
ஒரே முகாமில் 46 சேவைகள்
Image Credit : tndipr

ஒரே முகாமில் 46 சேவைகள்

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டது.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

44
மகளிர் உரிமை தொகை - குவியும் விண்ணப்பம்
Image Credit : tndipr

மகளிர் உரிமை தொகை - குவியும் விண்ணப்பம்

கடந்த 15 நாட்களாக நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் இதுவரை 12லட்சத்து 65ஆயிரம் மனுக்கள் பெற பட்டுள்ளது. இதில் முக்கியமாக 5லட்த்து 88 ஆயிரம் மனுக்கள் கலைஞர் மகளிர் உரிமை கோரி இதுவரை விண்ணப்பித்துள்ளனார். ஏற்கனவே மகளிர் உரிமை தொகையை வழங்க பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக சுமார் 6 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்து இருப்பதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

எனவே தற்போது 6 லட்சம் விண்ணப்பங்களின் நிலை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து அதிகபட்சமாக 45 நாட்களில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியா என தகவல் அளிக்கப்படும். இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் புதியதாக இணைந்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என அரசு வட்டார தகவல்கள் கூறப்படுகிறது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு
பெண் அதிகாரம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved