MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 1.50 லட்சம் ஆசிரியர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்! குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

1.50 லட்சம் ஆசிரியர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த சுப்ரீம் கோர்ட்! குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

1 Min read
vinoth kumar
Published : Sep 02 2025, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : social media

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் நீடிக்க, பணி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test- TET) கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயம்.

24
Image Credit : our own

தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்றதாக கருதப்பட்டு, அவர்களுக்கான ஓய்வுகாலப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியராக பணியில் சேர விரும்புவோரும், ஆசிரியர் பணியில் உயர்வை விரும்புவோரும் இந்த தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற உரிமை இல்லை.

Related Articles

Related image1
10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! நாளை காலை 10 மணி முதல்!
Related image2
அடிதூள்! பொங்கலுக்கு 9 நாள் விடுமுறை.? பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்!
34
Image Credit : our own

மேலும் அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்துமா? என்பதை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் 1.50 லட்சம் பேருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

44
Image Credit : Asianet News

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என நீதிமன்ற தெரிவித்துள்ளது. எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது. யாரும் கவலைப்பட வேண்டாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
ஆசிரியர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழ்நாடு
உச்ச நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved