தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Tamil Nadu Election 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்திதது வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தினோம்.
வாக்குப்பதிவு எப்போது? வாக்கு எண்ணிக்கை எப்போது?
தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களில் மொத்தம் 17.4 கோடி பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் திருத்த பட்டியலுக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 824 தொகுதிகள் உள்ளன. 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை எப்போது?
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான முழு அறிவிப்பு இதோ:
அரசிதழ் அறிவிப்பு வெளியிடும் தேதி 30.03.2026 (திங்கள்)
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கள்)
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி 07.04.2026 (செவ்வாய்)
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 09.04.2026 (வியாழன்)
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி (Poll Date) 23.04.2026 (வியாழன்)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி 04.05.2026 (திங்கள்)
தேர்தல் நடைமுறைகள் முடிவடைய வேண்டிய தேதி 06.05.2026 (புதன்)
தேர்தல் நடத்தை விதிகள்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நிமிடம் முதல், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

