MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம் அதிரடி

மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம் அதிரடி

மாநில சட்டப்பேரவையால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை காலவரம்பின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ள உச்சநீதிமன்றம், ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என எச்சரித்துள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Nov 20 2025, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Image Credit : Asianet News

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நீதிமன்றத்திடம் 14 விழக்க கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

25
ஆளுநரின் பணி என்ன..?
Image Credit : Asianet News

ஆளுநரின் பணி என்ன..?

நீதிமன்ற தீர்ப்பில், “மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் தெரிவிக்காமலும் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது. கால வரம்பு இல்லாமல் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட அதிகாரம் கிடையாது. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பும் பட்சத்தில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அல்லது மசோதா தொடர்பாக விளக்கம் கேட்ட வேண்டும், அல்லது குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தான் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதமா? ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு விளக்கம்!
Related image2
தமிழக அரசின் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
35
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அதிகாரம்
Image Credit : Asianet News

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அதிகாரம்

ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசும், அமைச்சரவையும் மட்டுமே மாநிலத்தில் முதன்மையாக இருக்க முடியும். ஆளுநர்கள் மாநில அரசு அனுப்பும் மசோதாக்களில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதனை அரசுடன் பேசி இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்.

45
காலக்கெடு விதிக்க முடியாது
Image Credit : our own

காலக்கெடு விதிக்க முடியாது

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு நீதிமன்றம் காலக்கெடு வழங்க முடியாது. ஆளுநர்களுக்கு நீதிமன்றத்தால் அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும். அந்தந்த மசோதாவிற்கு ஏற்றாற்போல் ஆளுநர்களே சரியான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்.

55
ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும்..
Image Credit : Asianet News

ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும்..

ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஆளுநர் செயல்படாவிட்டால் நீதிமன்றம் தலையிடும். காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம். ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்கும் போது நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு அரசு
உச்ச நீதிமன்றம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
55 வயதில் சுலோச்சனா க.காதலனுடன் செய்த வேலை! நேரில் பார்த்த கணவர்! போரூர் டோல்கேட்டில் நடந்த அதிர்ச்சி!
Recommended image2
விவசாயிகளின் தலையில் பேரிடியை இறக்கிய மத்திய அரசு.. நெல்லின் ஈர அளவை உயர்த்த முடியாதாம்
Recommended image3
உட்கட்சி எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை..!இன்னுமும் பவர் தான்னு காட்டிய மோடி..!
Related Stories
Recommended image1
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதமா? ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு விளக்கம்!
Recommended image2
தமிழக அரசின் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved