MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஈரோட்டில் காலியான அதிமுக கூடாரம்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை தூக்கி எறிந்த 3000 நிர்வாகிகள்

ஈரோட்டில் காலியான அதிமுக கூடாரம்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை தூக்கி எறிந்த 3000 நிர்வாகிகள்

அதிமுக கட்சி பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000 நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவியை துறந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

1 Min read
Velmurugan s
Published : Sep 06 2025, 09:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
செங்கோட்டையனின் பதவி பறிப்பு
Image Credit : Asianet News

செங்கோட்டையனின் பதவி பறிப்பு

அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த காரணத்திற்காக அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் அனைத்து கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன. மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட வேறு சில நிர்வாகிகளின் பதவியும் பறிக்கப்பட்டது.

23
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா
Image Credit : Google

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா

இதனிடையே கோபிசெட்டிபாளையம் உட்பட ஈரோட்டின் பல பகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர, கிளை, பேரூர், கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 3000 நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

Related Articles

Related image1
சர்வாதிகாரி எடப்பாடி..! கட்சி சீனியரை பேச்சுக்கு கூட பேச அழைக்காத ஆணவம்
Related image2
நான் என்ன ஜான் பிரதீப்பா..? கெடுவான்..! செங்கோட்டையனை நீக்கியதற்கு கொதித்தெழுந்த டி.டி.வி.தினகரன்..!
33
அதிமுக ஒன்றுபட நிர்வாகிகள் கோரிக்கை
Image Credit : our own

அதிமுக ஒன்றுபட நிர்வாகிகள் கோரிக்கை

அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, அதிமுக பழைய வலிமையை பெறவேண்டும், வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும், எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் மக்களுக்கு உதவி செய்யும் ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல எண்ணம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு பொதுச் செயலாளர் அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சி பதவியில் இருந்து விலகுகின்றோம். கட்சி ஒன்று பட்டால் பதவியில் நீடிப்போம் என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved