MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!

3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!

சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை, போத்தனூர், மங்களூரு, திருவனந்தபுரம், நாகர்கோவில், தாம்பரம், செங்கோட்டை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 14 முதல் 18 வரை இயக்கப்படும்.

2 Min read
vinoth kumar
Published : Aug 08 2025, 06:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தொடர் விடுமுறை
Image Credit : our own

தொடர் விடுமுறை

சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தால் நாள் தோறும் பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். அந்த வகையில் சொந்த ஊரை விட்டும், உறவினர்களை விட்டும் வெளியூர்களில் பணிக்காக வருடம் முழுவதும் உழைத்து வருகிறார்கள். அப்படி வெளியூரில் வேலைக்காக செல்லும் நபர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நிகழ்வுகளுக்காகவும், வார விடுமுறை அல்லது தொடர் விடுமுறைக்காக மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள். இவர்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

25
தெற்கு ரயில்வே
Image Credit : our own

தெற்கு ரயில்வே

இதுதாடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வருகிற 14-ம் தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும். 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில், வரும் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

Related Articles

Related image1
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம்! அட! டிக்கெட் கட்டணம் இவ்வளவு தள்ளுபடியா!
Related image2
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?
35
மங்களூர் - திருவனந்தபுரம்
Image Credit : our own

மங்களூர் - திருவனந்தபுரம்

அதேபோல் வருகிற 14, 16 ஆகிய தேதிகளில் மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி, 14 மற்றும் 16-ம் தேதிகளில், மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கத்தில், 15, 17 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூரு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
நாகர்கோவில் - தாம்பரம்
Image Credit : our own

நாகர்கோவில் - தாம்பரம்

மேலும் வரும் 17-ம் தேதி நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 17-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் 18-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
சென்னை எழும்பூர் - செங்கோட்டை
Image Credit : our own

சென்னை எழும்பூர் - செங்கோட்டை

மேலும் வருகிற 14-ம் தேதி சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும். அன்று இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் 17-ம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
விடுமுறை
தென்னக இரயில்வே
தமிழ்நாடு
திருவிழாக்கள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved