MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குஷியான செய்தி.! அமைச்சர் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு குஷியான செய்தி.! அமைச்சர் வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு

ஏப்ரல் 2025 பட்டயத் தேர்வில் நிலுவை வைத்திருக்கும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, ஜூன்/ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு மூலம் மாணவர்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பைத் தொடர வழிவகுக்கிறது.

2 Min read
Ajmal Khan
Published : Jun 09 2025, 01:00 PM IST| Updated : Jun 09 2025, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்
Image Credit : our own

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்

தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்ததால் மீண்டும் தேர்வெழுத முன்பு ஒரு ஆண்டுகள் காத்திருந்த பின்னர் மீண்டும் எழுத வேண்டிய நிலை இருந்தது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு உடனடியாக தேர்வெழுத வழிவகை செய்யப்பட்டது. 

இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில் உடனடியாக அடுத்த படிப்பிற்கு செல்ல இயல்கிறது. இந்த நிலையில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

25
தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
Image Credit : our own

தமிழக அரசின் கல்வி திட்டங்கள்

தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணாக்கர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணாக்கர்களின் கல்வித் தரத்தை செம்மைபடுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணாக்கர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் பல்வேறு நிலையில் தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.

Related Articles

Related image1
ஆசிரியர்களுக்கு ஓய்வுகால பலன்கள்.! முதல்வருக்கு பறந்த முக்கிய அறிக்கை
Related image2
தமிழகத்தில் ஜூன் 10 முதல் 14ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம்!
35
பாலிடெக்னிக் தேர்வில் தோல்வி
Image Credit : our own

பாலிடெக்னிக் தேர்வில் தோல்வி

ஏப்ரல், 2025-இல் நடைபெற்ற பட்டயத் தேர்வுகளில் இறுதி பருவம் / துணைத் தேர்வினை எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை வைத்துள்ளனர். அம்மாணாக்கர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி மாணாக்கர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக 

ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வின் (Special Supplementary Examination) மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இம்மாணாக்கர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்

45
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு துணைத்தேர்வு
Image Credit : our own

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு துணைத்தேர்வு

இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் / ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு கால அட்டவணையின்படி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு இணைய வழியில் ஜூன் 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாளாக ஜூன் 23ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25ஆம் தேதி நுழைவு சீட்டு பதவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும்,

55
சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
Image Credit : our own

சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

கருத்தியல் தேர்வு ஜூன் 30-ம் தேதியில் இருந்து ஜூலை 16ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு ஜூலை 17ஆம் தேதியிலிருந்து 25 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தேர்வானது ஜூலை 30-ஆம் தேதி முடிவடையும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு துணை தேர்வுக்கு தேர்வு கட்டணமாக விண்ணப்ப கட்டணம் 30 ரூபாயும் ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் 65 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கல்வி
கல்லூரி
தேர்வு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved