மாணவர்களுக்கு 40 நாள் விடுமுறை.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, கூடுதல் பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Summer holiday special buses : கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக்கிடக்கிறார்கள். பகல் வேளைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு இன்றோடு முடிவடைகிறது. இதனையடுத்து நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படவுள்ளது. எனவே மாணவர்கள் தங்களது பெற்றோர்களோடு வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல தயாராகி வருகிறார்கள்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அந்த வகையில் ரயில்களில் அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளில் செல்ல தயாராகி வரும் மக்களுக்காக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாளை (25/04/2025 வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் நாளை மறுதினம் (26/04/2025 சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
koyambedu
கோயம்பேடு, கிளாம்பாக்கம் சிறப்பு பேருந்து
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25/04/2025 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும்
26/04/2025 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, 25/04/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 370 பேருந்துகளும், 26/04/2025 (சனிக்கிழமை) 450 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .
அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்து
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 26/04/2025 அன்று 20 பேருந்துகளும் 26/04/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணியுங்கள்
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,970 பயணிகளும் சனிக்கிழமை 5,115 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,189 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.