- Home
- Tamil Nadu News
- அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு கொண்டாட்ட செய்தியை சொன்ன போக்குவரத்து துறை
அடுத்தடுத்து விடுமுறை.! அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு கொண்டாட்ட செய்தியை சொன்ன போக்குவரத்து துறை
வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

விடுமுறை தினத்தில் சொந்த ஊர் பயணம்
சொந்த ஊரில் வேலை இல்லாமல் தினந்தோறும் பல லட்சம் பேர் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களுக்கு பணிக்காக செல்கிறார்கள். அந்த வகையில் எப்போதாவது பண்டிகை விடுமுறை, வார விடுமுறை கிடைத்தால் மட்டுமே சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். இதே போல உயர்கல்விக்காக ஏராளமான மாணவர்கள் வெளியூரில் தங்கி படிக்கிறார்கள்.
அவர்களுக்கும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ரம்ஜான் போன்ற தினங்களில் கிடைக்கும் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள். இந்த நிலையில் வருகிற வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி விடுமுறை - சிறப்பு பேருந்து
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் நாளை தினம் (04/07/2025 வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ( 05/07/2025 சனிக்கிழமை) 06/07/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். .இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பேருந்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு - சிறப்பு பேருந்து
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 04/07/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 325 பேருந்துகளும், 05/07/2025(சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 04/07/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 05/07/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மாதாவரத்திலிருந்து 04/07/2025 மற்றும் 05/07/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை, பெங்களூர் திரும்ப சிறப்பு பேருந்து
மேலும், விடுமுறைக்கு பிறகு ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வார இறுதியில் வெளியூர் செல்வதற்காக வெள்ளிக்கிழமை அன்று 8327 பயணிகளும், சனிக்கிழமை 5052 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8148 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.