- Home
- Tamil Nadu News
- Solar Subsidy : கரண்ட் பில் இனி ஜீரோ! சோலார் பேனலுக்கு அரசு தரும் ரூ.1 லட்சம் மானியம்! எப்படி விண்ணப்பிப்பது?
Solar Subsidy : கரண்ட் பில் இனி ஜீரோ! சோலார் பேனலுக்கு அரசு தரும் ரூ.1 லட்சம் மானியம்! எப்படி விண்ணப்பிப்பது?
Solar Subsidy : தமிழ்நாட்டில் வீட்டு மாடியில் சோலார் பேனல் அமைக்க மத்திய, மாநில அரசுகளின் மானியம் சேர்த்து ரூ.1 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. யாரெல்லாம் பெறலாம், எவ்வளவு மானியம், எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ!

தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் வரை சோலார் மானியம்!
மாதம் மாதம் வரும் மின்கட்டணம் குடும்ப பட்ஜெட்டில் பெரிய செலவாக இருக்கிறதா? வீட்டின் மாடியில் சோலார் பேனல் அமைக்க நினைப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் முக்கியமான நிதியுதவி கிடைக்கிறது. மத்திய அரசின் பிரதமர் சூர்யா கர்: முஃப்த் பிஜ்லி யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு மாடியில் சோலார் மின் அமைப்பு நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
இதனுடன் தமிழ்நாடு அரசு தனது 2026–27 திருத்தப்பட்ட பட்ஜெட்டில் புதிய rooftop solar மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் திட்டத்துடன் இணைந்து தகுதியான வீட்டு மின் நுகர்வோருக்கு ரூ.1 லட்சம் வரை மொத்த நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கியுள்ளது. அதனால், தமிழ்நாட்டில் சொந்த வீட்டில் சோலார் அமைக்க நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
இதையும் படிங்க : Coffee-Tea : காபி, டீ குடிச்சதும் சிலருக்கு ஏன் பாத்ரூம் வருது? இது ஆபத்தா? காரணம் இதுதான்!
யாரெல்லாம் இந்த மானியத்தை பெறலாம்?
இந்த மானியம் பொதுவாக வீட்டு மின் நுகர்வோருக்கான ரூஃப்டாப் சோலார் அமைப்புக்கு வழங்கப்படுகிறது. பிரதமர் சூர்யா கர் திட்ட விதிகளின்படி, மின் விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட வீட்டு மின் இணைப்பு கொண்டவர்கள் ரூஃப்டாப் சோலார் அமைக்க விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் இந்தச் செயல்முறை TNPDCL-ன் யூனிஃபைட் சோலார் ரூஃப்டாப் போர்டல் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
வீட்டு மாடியில் சோலார் பேனல் அமைக்க போதுமான இடம் இருப்பதும் முக்கியம். மேலும், அதே ரூஃப்டாப் சோலார் அமைப்புக்கு வேறு அரசு மானியம் ஏற்கனவே பெற்றிருக்கக் கூடாது.
குறிப்பு : இது அரசு இலவசமாக சோலார் பேனலை வீட்டில் வந்து பொருத்திக் கொடுக்கும் திட்டம் கிடையாது. முதலில் தகுதியான சோலார் அமைப்பை நிறுவி, திட்ட விதிகளின்படி மானியத்தைப் பெற வேண்டும்.
இதையும் படிங்க : Simhasana Surya Yoga : சிவன், விஷ்ணு, புதன், சூரியன் 4 பேரும் சேர்ந்து 4 ராசிகளுக்கு வழங்கப்போகும் சிம்மாசன சூர்ய யோகம்!
ரூ.78,000 மத்திய மானியம் எப்படி கணக்கிடப்படுகிறது?
மத்திய அரசின் PM Surya Ghar திட்டத்தில் சோலார் அமைப்பின் திறனைப் பொறுத்து மானியம் வழங்கப்படுகிறது.
1 kW — ரூ.30,000 வரை
2 kW — ரூ.60,000 வரை
3 kW — ரூ.78,000 வரை
3 kW-க்கு மேல் திறன் கொண்ட rooftop solar அமைப்பை நிறுவினாலும், மத்திய அரசின் மானிய உச்சவரம்பு ரூ.78,000 ஆகும். இதனுடன் தமிழ்நாடு அரசின் புதிய கூடுதல் rooftop solar மானியத்தையும் சேர்த்தால், தகுதியான வீட்டு நுகர்வோருக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் வரை நிதியுதவி கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் புதிய கூடுதல் மானியத்துக்கான முழுமையான நடைமுறை விதிகள் வெளியாகும் வரை, ஒவ்வொரு வீட்டுக்கும் சரியாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தனித்தனியாக உறுதி செய்ய முடியாது.
இதையும் படிங்க : Cooking Tips : சத்துகள் குறையாமல் சமைப்பது எப்படி? இந்த 7 டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க!
சோலார் போட்டால் கரண்ட் பில் ஜீரோ ஆகுமா?
இதுதான் இந்தத் திட்டத்தைப் பற்றி பலரும் தெரிந்துகொள்ள விரும்பும் விஷயம். சோலார் பேனல்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும். பகலில் வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், மின்வாரியத்திடம் இருந்து வாங்க வேண்டிய மின்சாரத்தின் அளவு குறையலாம்.
பிரதமர் சூர்யா கர் திட்டத்தின் அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, 3 kW ரூஃப்டாப் சோலார் அமைப்பு சராசரியாக ஒரு மாதத்தில் 300 யூனிட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. ஆனால் சோலார் மின் உற்பத்தி ஒவ்வொரு நாளும் ஒரே அளவில் இருக்காது. வெயிலின் அளவு, நிழல், பேனலின் திறன், மாடியின் அமைப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் உற்பத்தியை பாதிக்கலாம்.
அதனால், “சோலார் பேனல் வைத்தால் அனைவருக்கும் கரண்ட் பில் எப்போதும் ஜீரோ” என்று அர்த்தம் கிடையாது. சரியான திறன் கொண்ட அமைப்பை நிறுவினால், மின்கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதே சரியான புரிதல்.
இதையும் படிங்க : Hair : மொட்டை அடித்தால் முடி நன்றாக வளருமா? உண்மை என்ன தெரியுமா?
அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு என்ன ஆகும்?
ஒரு வீட்டில் சோலார் பேனல்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம், அந்த நேரத்தில் வீட்டின் தேவையைவிட அதிகமாக இருந்தால், மின் வலையமைப்புடன் இணைக்கப்பட்ட சோலார் அமைப்பில் அந்த உபரி மின்சாரம் மின் வலையமைப்புக்குச் செல்லும். இதற்கான கணக்கு, மீட்டர் நடைமுறை மற்றும் உபரி மின்சாரத்திற்கான கணக்கீடு ஆகியவை மாநிலத்தின் விதிகள் மற்றும் மின் விநியோக நிறுவனத்தின் நடைமுறையைப் பொறுத்தது.
தமிழ்நாட்டில் பிரதமர் சூர்யா கர் திட்டத்தின் கீழ் ரூஃப்டாப் சோலார் அமைப்பதற்கான விண்ணப்பம் TNPDCL-ன் யூனிஃபைட் சோலார் ரூஃப்டாப் போர்டல் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சோலார் அமைப்பு நிறுவப்பட்ட பிறகு தேவையான ஆய்வு, மீட்டர் தொடர்பான செயல்முறை மற்றும் இறுதி ஒப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், சோலார் அமைப்பை நிறுவுவதற்கு முன்பே வீட்டின் பயன்பாட்டுக்கு எத்தனை kW தேவை? என்பதையும், உங்கள் மின் இணைப்புக்கான தற்போதைய விதிகளையும் தெரிந்துகொள்வது முக்கியம்.
இதையும் படிங்க : Mileage Bikes : ரூ.80,000 பட்ஜெட்டில் 75 கி.மீ மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!
தமிழ்நாட்டில் எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாட்டில் பிரதமர் சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மானியம் பெற விரும்புபவர்கள் முதலில் பிரதமர் சூர்யா கர்தேசிய இணையத்தளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு கிடைக்கும் விண்ணப்பக் குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் TNPDCL ஒருங்கிணைந்த சோலார் இணையதளம் வழியாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக விண்ணப்பிக்கும் நடைமுறை
1. பிரதமர் சூர்யா கர் தேசிய இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
2. உங்கள் மின் இணைப்பு எண் மற்றும் தேவையான விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
3. வீட்டின் மாடியில் சோலார் மின் அமைப்பை நிறுவுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
4. தேவையான ஒப்புதல் கிடைத்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் சோலார் பேனல்களை நிறுவவும்.
5. நிறுவல் முடிந்ததும், மின் வாரியத்தின் ஆய்வு மற்றும் இருவழி மின் மீட்டர் பொருத்தும் பணிகளை முடிக்க வேண்டும்.
6. நிறுவல் பணிகள் நிறைவடைந்து இறுதி ஒப்புதல் கிடைத்த பிறகு, திட்ட விதிகளின்படி மானியம் பெறுவதற்கான செயல்முறை முடிக்கப்படும்.
சமீபத்திய மின் கட்டண ரசீது, பயனாளியின் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது முக்கியம்.
இதையும் படிங்க : Dosa : தோசை கல்லுல ஒட்டாம, ரவுண்டா, மொறு மொறுன்னு சுடுறது எப்படி? தோசை மாஸ்டரின் 8 டிப்ஸ் இதோ!

