- Home
- Tamil Nadu News
- கும்பாபிஷேகம் நடந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
கும்பாபிஷேகம் நடந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?
திருச்செந்தூரில் பவுர்ணமி நாளான இன்று 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு. பக்தர்கள் கடலுக்குள் இருக்கும் பாறைகள் மீது ஏறி குளித்து விளையாடுகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் விழா கடந்த ஜுலை மாதம் 7ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்று சில நாட்களே ஆவதால் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் முருகனை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் விஷசே நாட்கள் வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். மேலும், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் அவ்வப்போது திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூரில் 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு எற்பட்டது. கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலுக்குள் இருக்கும் பச்சை பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. இதனையடுத்து அந்த பாறைகள் மீது ஏறி கடலுக்குள் பக்தர்கள் குளித்து விளையாடுகின்றனர். மேலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.