MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கும்பாபிஷேகம் நடந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?

கும்பாபிஷேகம் நடந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிர்ச்சி! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?

திருச்செந்தூரில் பவுர்ணமி நாளான இன்று 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு. பக்தர்கள் கடலுக்குள் இருக்கும் பாறைகள் மீது ஏறி குளித்து விளையாடுகின்றனர். 

1 Min read
vinoth kumar
Published : Aug 08 2025, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் விழா கடந்த ஜுலை மாதம் 7ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

24
Image Credit : Google

கும்பாபிஷேகம் நடைபெற்று சில நாட்களே ஆவதால் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் முருகனை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் விஷசே நாட்கள் வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். மேலும், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் அவ்வப்போது திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Related Articles

Related image1
ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு! ஆகஸ்டு 29ம் தேதி வரைக்கும் தான் டைம்! அதுவும் பள்ளி மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்!
Related image2
ஷாக்கிங் நியூஸ்! கீழே சரிந்து விழுந்ததில் தலையில் காயம்! நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!
34
Image Credit : Asianet News

இந்நிலையில் பவுர்ணமி நாளான இன்று திருச்செந்தூரில் 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு எற்பட்டது. கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலுக்குள் இருக்கும் பச்சை பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. இதனையடுத்து அந்த பாறைகள் மீது ஏறி கடலுக்குள் பக்தர்கள் குளித்து விளையாடுகின்றனர். மேலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்து கொண்டனர்.

44
Image Credit : stockPhoto

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்களில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved