MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Leave : வெளுத்து வாங்கும் மழை.! பள்ளிகளுக்கு அரசு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

School Leave : வெளுத்து வாங்கும் மழை.! பள்ளிகளுக்கு அரசு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Ajmal Khan
Published : Jul 30 2024, 07:11 AM IST| Updated : Jul 30 2024, 07:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Rain school leave

Rain school leave

சென்னையில் இடியுடன் மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை  37 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

23
heavy rain and 5 dist school leave

heavy rain and 5 dist school leave

கன மழை எச்சரிக்கை

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

  வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.. அந்த வகையில் தமிழகத்தில்  நீலகிரி மாவட்டம், கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எச்சரித்திருந்தது. 

33
school leave

school leave

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
கனமழை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved