MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சைபர் கிரைம் வழக்குகளில் ரூ.772 கோடி முடக்கம்: தமிழக காவல்துறை தகவல்

சைபர் கிரைம் வழக்குகளில் ரூ.772 கோடி முடக்கம்: தமிழக காவல்துறை தகவல்

TN Police on Cybercrime cases: 2024ல் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் ரூ.772 கோடி பணத்தை முடக்கியுள்ளனர். 34,392 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 838 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சைபர் விழிப்புணர்வுக்காக சைபர் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெறும்.

1 Min read
SG Balan
Published : Jan 13 2025, 10:19 PM IST| Updated : Jan 13 2025, 10:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Cybercrime cases

Cybercrime cases

2024ஆம் ஆண்டில் சைபர் கிரைம் வழக்குகளில் ரூ.772 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளனது. இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

25
TN Police

TN Police

2024-ம் ஆண்டு 'சைபர் கிரைம்' உதவி எண் கட்டுப்பாட்டு அறைக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 875 அழைப்புகள் வந்தது. இதில் நிதிமோசடி குறித்து 34 ஆயிரத்து 392 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சைபர் மோசடி சம்பவங்களில் மக்கள் இழந்த ரூ.1,673.85 கோடியில் ரூ.771.98 கோடி முடக்கப்பட்டது.

35
Cybercrime Report

Cybercrime Report

இதில் ரூ.83.34 கோடி பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 838 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 34 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 19,359 போலி சிம்கார்டுகள், 54 போலி இணையதளங்கள் உள்பட பல மோசடி தளங்கள் முடக்கப்பட்டன.

45
Cybercrime Walkathon

Cybercrime Walkathon

ஆபரேஷன் "திரை நீக்கு" நடவடிக்கை மூலம் கடந்த டிசம்பர் 6 முதல் 8-ந்தேதி வரையில் தமிழகத்தில் 76 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும் வருகிற 29-ந்தேதி சைபர் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

55
Cybercrime Awareness

Cybercrime Awareness

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வி.பி.சிங் சிலையில் இருந்து போர் நினைவிடம் வரை சைபர் வாக்கத்தான் நடைபெறும்"

இவ்வாறு தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved