MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN School Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்? அப்ளை செய்வது எப்படி?

TN School Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யாருக்கெல்லாம் கிடைக்கும்? அப்ளை செய்வது எப்படி?

அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், மாநில மதிப்பீட்டு புல திறனாய்வு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 13 2024, 06:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

அரசு பள்ளி மாணவ - மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் என்ற பெயரில் திறனாய்வு தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகை அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் கிடைக்காது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

சென்னையை தவிர பிற மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் மாணவ, மாணவிகளின் கற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த திறனாய்வு தேர்வுக்கு மாண்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

37

இதுதொடர்பாக தமிழக தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: 2024-25ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி (சனிக்கிழமை) நடக்கவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திறனாய்வு தேர்வுக்கு சில தகுதிகள் மற்றும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

47
School Student

School Student

ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருவாய் துறையினரிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்று பெற்று அளித்தல் வேண்டும். 8-ம் வகுப்பு இறுதி ஆண்டு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

57

தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேர்வுக்கான கட்டணம் ரூ.5 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.5 என மொத்தமாக ரூ.10 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

67

ஊரகத் திறனாய்வு தேர்வு தேதி

தேர்விற்கு விண்ணப்பிக்க நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஊரக திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.  

77

ரூ.1000 ஊக்கத்தொகை

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவிகள் + 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும் காலத்திற்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். குறிப்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் விண்ணப்பிக்க இயலாது என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Praveen Chakravarty: தவெக தயவில் எம்.பி.யாகும் ராகுலின் வலது கரம்! யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?
Recommended image2
வைகை எக்ஸ்பிரஸ், குருவாயூர் ரயில் சேவைகளில் மாற்றம்! பயணிகளுக்கு முக்கிய அலர்ட்!
Recommended image3
Magalir Urimai Thogai: பெண்களுக்கு ஜாக்பாட்! மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது? முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved