MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இனி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்படாது! மின்சார ரயில் சேவையிலும் மாற்றம்!

இனி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் புறப்படாது! மின்சார ரயில் சேவையிலும் மாற்றம்!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தாம்பரம்-கடற்கரை இடையேயான 6 மின்சார ரயில் சேவையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Jun 20 2025, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரயில்வே துறை
Image Credit : our own

ரயில்வே துறை

நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ரயில் சேவையை அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு பாதுகாப்புக்காக அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக ரயில் ரத்து, பகுதியாக ரத்து, வழித்தட மாற்றங்கள் விவரம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

26
ஐந்து விரைவு ரயில்கள் மாற்றம்
Image Credit : our own

ஐந்து விரைவு ரயில்கள் மாற்றம்

இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஐந்து விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. எந்தெந்த ரயில்கள் என்பதை பார்ப்போம். எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-மதுரை, எழும்பூர்-மன்னார்குடி, எழும்பூர்-திருச்செந்தூர், எழும்பூர்-குருவாயூர் ஆகிய 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 18-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Related image1
Goondas Act Against Venkatesan: அமித் ஷாவை சந்தித்த சில நாட்களில் வெங்கடேசனின் பதவியும் போச்சு! குண்டர் சட்டமும் பாய்ந்தது!
Related image2
Power Cut : கோவை முதல் சென்னை வரை மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம்! இதோ முழு லிஸ்ட்!
36
தெற்கு ரயில்வே
Image Credit : Google

தெற்கு ரயில்வே

அதேபோல் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-கடற்கரை இடையிலான 6 மின்சார ரயில் சேவை இன்று முதல் வரும் ஆகஸ்டு 18-ம் தேதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தாம்பரத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு கடற்கரை செல்லும்.

46
மின்சார ரயில்களில் மாற்றம்
Image Credit : our own

மின்சார ரயில்களில் மாற்றம்

கடற்கரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக அதிகாலை 4.25 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் செங்கல்பட்டில் இருந்து காலை 9.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 10.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

56
தாம்பரம் செல்லும் மின்சார ரயில்
Image Credit : our own

தாம்பரம் செல்லும் மின்சார ரயில்

கடற்கரையில் இருந்து காலை 11.52 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக காலை 11.55 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும். கடற்கரையில் இருந்து மதியம் 12.02 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக மதியம் 12.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும். கடற்கரையில் இருந்து மதியம் 12.28 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக மதியம் 12.25 மணிக்கு கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும்.

66
வார நாட்களில் இயக்கப்படும் ரயில்கள்
Image Credit : Google

வார நாட்களில் இயக்கப்படும் ரயில்கள்

அரக்கோணத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயில், காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு மாற்றாக காலை 9.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மேற்கண்ட ரயில்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் இயக்கப்படும் ரயில்கள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை கடற்கரை-தாம்பரம் இருமார்க்கமாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் மட்டும் இயக்கப்பட உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தென்னக இரயில்வே
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved