MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்.! திரைமறைவில் நடப்பது என்ன.? இபிஎஸ் முடிவு என்ன.?ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு விளக்கம்

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்.! திரைமறைவில் நடப்பது என்ன.? இபிஎஸ் முடிவு என்ன.?ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு விளக்கம்

அதிமுகவில் முக்கிய முடிவு  எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம் ஓ.பன்னீர் செல்வம் அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சினுடைய வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையிலே பின்தங்கி இருந்ததாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

2 Min read
Ajmal Khan
Published : May 19 2024, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

மீண்டும் ஓபிஎஸ்

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க இருப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ,ர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சேர்க்கத் திட்டம் என்பதாகவும்,

திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வருகிறது. இந்த தகவல் எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பத்திரிக்கையினுடைய பரபரப்புக்காக பல்வேறு தகவல்களை பத்திரிகைகளும் ஊடகங்களிலும் வெளியிட்டு வருகின்றார். 

26

பிள்ளையார் சுழி போட்டவர் ஓபிஎஸ்

மேலும் அதிமுக மூத்த கழக நிர்வாகிகள் இடத்தில்  கருத்து வேறுபாடு கூட்டணி அமைப்பதிலும்,  களம் காண்பதில் தேர்தல் பணி ஆற்றுவதில் இருந்து அவர்களாக ஒரு கற்பனை செய்து கொண்டு அவர்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டே வருகின்றார்கள் அதற்கு உரியவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் கூட மறுப்பு தெரிவித்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் பரபரப்பு செய்திகளுக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 அம்மாவுடைய(ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு முதன் முதலில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலை வந்தவுடன் பிரிவுக்காக முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர் செல்வம்.   
 

36

கட்சியின் ஒற்றுமைக்காக மீண்டும் இணைத்தோம்

உயிரைக் கொடுத்து உருவாக்கிய  அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை தீர்மானம் சட்டமன்றத்தில் முன்வைத்த போது அதில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சியினுடைய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு அவருக்கு கட்சியிலே மிக உயர்ந்த பொறுப்பான பொதுச் செயலாளர் அந்தஸ்துலான பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆளுங்கட்சி தான் இப்படி இருக்குதுன்னா! எதிர்க்கட்சி அதுக்கு மேல! அரசியல் செய்யத்தெரியாத இபிஎஸ்! கே.சி.பழனிசாமி!

46

தேனியில் கூட வெற்றிபெறமுடியவில்லை

முதலமைச்சர் பதவிக்கு இணையான துணை முதலமைச்சர் பதவியும் வீட்டு வசதி வாரியத் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. அதிமுகவில் முக்கிய முடிவு  எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம் ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சினுடைய வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையிலே பின்தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.

ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் இரட்டை இலை எத்தனை தொகுதி அங்கே வெற்றி பெற்றிருக்கிறது.  அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதியை தவிர நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதி தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.  

அதிமுக மாஜி அமைச்சரின் உதவியாளர் கஞ்சா விற்பனை.. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் கூட்டணி- சீறும் டிடிவி

56

சின்னாபின்னமாக்க முயன்றார்

சின்ன குழந்தையிடம் கேட்டால் அண்ணா டிஎம்கே என்று சொல்வதோடு சேர்த்து ஆன்ட்டி டி எம் கே என்பதுதான் கூறுவார்கள். ஆனால் திமுகவிற்கு ஆதரவான கருத்துகளை பேசுவதை தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள். மேலும் அதிமுக அலுவலகத்தை உடைத்து கபளிகரம் செய்தார்.

நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு, ஒற்றை சீட்டுக்காக அதிமுகவை தோல்வி அடைய செய்ய ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அமைதி காக்காமல் அதிமுகவை சின்னாபின்னாமாக்க முயன்றார். இப்படிப்பட்ட நிலையில், மீண்டும் விஷப்பரிச்சைக்கு அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. தொண்டர்கள் விருப்பத்தை தான் செயல்படுத்துவார்கள். 

66

எந்த ரகசிய பேச்சும் நடத்தவில்லை

செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பற்றி தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். எந்த காலத்திலும் ஓபிஎஸ்யை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்த வித உண்மையும், எந்த வித ரகசிய பேச்சும் நடத்தவில்லை. இதனை அழுத்தம் திருத்தத்தோடு எடப்பாடி பழனிசாமி உத்தரவோடு தெரிவிப்பதாக ஆர்.பி,.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved