MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயில் திருவிழாவில் பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.. 8 பேர் படுகாயம்..!

கோயில் திருவிழாவில் பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.. 8 பேர் படுகாயம்..!

அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jan 23 2023, 09:26 AM IST| Updated : Jan 23 2023, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த, விழாவில் பக்கத்து ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர் முயற்சி செய்துள்ளனர்.

25

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவன் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முத்து(40), பூபாலன்(45) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

35

இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர்  படுகாயமடைந்தனர். உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  சின்னசாமி (85) என்பவர் உயிரிழந்தார். 

45

இதனால், கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். 

55

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கோவில் திருவிழாவில்  கிரேன் கவிழ்ந்த விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விபத்து
Latest Videos
Recommended Stories
Recommended image1
அருள் நாவை நடக்க வேண்டும்..! இல்லையென்றால்??? அன்புமணி தரப்பு வார்னிங்! பாமகவில் முற்றும் மோதல்!
Recommended image2
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக்கூடாது..! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு..! தவெகவுக்கு சிக்கல்..?
Recommended image3
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்! முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved