MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எனக்கே தெரியாம அன்புமணி கட்சிக்குள்ள பல உள்ளடி வேலை செஞ்சிட்டாரு - வேதனையில் குமுறும் ராமதாஸ்

எனக்கே தெரியாம அன்புமணி கட்சிக்குள்ள பல உள்ளடி வேலை செஞ்சிட்டாரு - வேதனையில் குமுறும் ராமதாஸ்

எனது வியர்வையில் வளர்க்கப்பட்ட பாமகவை சூது செய்தும், வஞ்சகம் செய்தும் என்னிடம் இருந்து அபகரிக்க அன்புமணி முயற்சி செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Aug 07 2025, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
எனக்கு எதிராக அன்புமணி சூது செய்கிறார்
Image Credit : facebook / ramadoss

எனக்கு எதிராக அன்புமணி சூது செய்கிறார்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாமகவை நான் ரத்தம் சிந்தியும், வியர்வை சிந்தியும் வளர்த்தேன். இது எனது வியர்வையால் வளர்ந்த கட்சி. இந்த கட்சியின் நிறுவனரும் நான் தான், கட்சியின் தலைவரும் நான் தான். அன்புமணி வஞ்சனையாலும், சூது செய்தும் கட்சியை கைப்பற்றி முயற்சி செய்கிறார்.

நிறுவனரும் நானே, தலைவரும் நானே

அன்புமணிக்கு நான் வழங்கிய தலைவர் பதவிக்கான காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. தலைவர் பதவி நிறைவு பெற்ற பின்னர் அவருக்கு செயல் தலைவர் என்ற பொறுப்பை வழங்கி மக்களை சந்திக்குமாறு கூறினேன். ஆனால் அந்த வேலையை செய்யாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்.

23
வாய் கூசாமல் பொய் சொல்லும் அன்புமணி
Image Credit : facebook / ramadoss

வாய் கூசாமல் பொய் சொல்லும் அன்புமணி

அன்புமணி, தன்னை சந்திப்பதற்காக தைலாபுரம் வந்ததாகவும், என்னை சந்திப்பதற்காக வந்து அவரை சந்திக்க நான் மறுத்ததாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார். அப்படி என்னை சந்திப்பதற்காக யாரும் வரவில்லை. யார் வரும்போதும் நான் கதவை சாத்தி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் பை பையாக பொய் பேசி வருகிறார்.

பாமக.வினர் என்னை கடவுளாக நினைக்கிறார்கள்

நான் பாமக.வின் நிறுவனராக இருந்தாலும், கட்சியில் உள்ள சொந்தங்களில் சிலர் என்னை கடவுளாக நினைக்கிறார்கள். அப்படி நினைத்தவர்களில் சிலரை அன்புமணி பணத்தாசையை காட்டி தனது பக்கம் இழுத்துக் கொண்டுள்ளார்.

Related Articles

Related image1
நீதிமன்றம் வரை சென்ற தந்தை-மகன் பஞ்சாயத்து! அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் ஐகோர்ட்டில் அதிரடி வழக்கு!
Related image2
இதெல்லாம் மானம் கெட்ட பிழைப்பு! அன்புமணி வாய் திறந்தா என்ன நடக்கும் தெரியுமா? ராமதாஸ்க்கு எதிராக கொதித்த தங்கர் பச்சான்!
33
பிளவு எங்கிருந்து வந்தது?
Image Credit : facebook / ramadoss

பிளவு எங்கிருந்து வந்தது?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், அடுத்து வரக்கூடிய 2025 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன் என்பதால் என்னை எதிர்த்து நிற்கிறார்.

மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தேன்

அன்புமணிக்கு நான் எந்த வகையில் குறை வைத்தேன்? நன்றாக படிக்க வைத்து எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் அழகு பார்த்தேன். ஆனால் இன்று என்னை எதிர்த்து நிற்கிறார் என்று கூறி தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved