- Home
- Tamil Nadu News
- காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!
2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் விடுமுறை நாட்களைத் திட்டமிட இது உதவும்.

பள்ளிக்கல்வித்துறை
தமிழகம் முழுவதும் தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025-26க்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு
இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு எப்போது எத்தனை நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கப்போகிறது என்பதை அமைச்சர் அன்பில் மகஷே் வெளியிட்டுள்ளார். அதில், காலாண்டு தேர்வு 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 18ம் தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி விடுமுறை கிடைக்கிறது. அதாவது காலாண்டு விடுமுறை மொத்தம் 11 நாட்கள் கிடைக்கிறது. இந்த 11 நாட்கள் விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி வருகிறது.
அரையாண்டு தேர்வு
அதேபோல் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மொத்தம் 8 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது.
பொதுத்தேர்வு அட்டவணை எப்போது?
மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில்: கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அடங்கிய பக்கங்களை இணைத்துள்ளோம். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தயார் ஆகுங்கள் என்று வாழ்த்து கூறியுள்ளார்.