MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?

தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு.! முன்பதிவு தொடங்கியதா.?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிகமான மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்புவதற்கு வசதியாக கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

2 Min read
Ajmal Khan
Published : Jan 14 2025, 01:30 PM IST| Updated : Jan 14 2025, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pongal Celebration

Pongal Celebration

பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழக மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 6 முதல் 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

எனவே பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியூர்களுக்கு ரயில், பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு நாளை இரவு முதல் சென்னை திரும்பவுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 

24
Special Train

Special Train

சிறப்பு ரயில் அறிவிப்பு

இருந்த போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் மக்களுக்காக  தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. (ரயில் எண்  06168) இந்த ரயிலானது ஜனவரி 19ஆம் தேதி மாலை 4:25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 3:45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து அடைகிறது.

34
train ticket

train ticket

தூத்துக்குடி டூ சென்னை

இந்த ரயிலில் 7 ஏசி வகுப்பு பெட்டிகளும், 6 முன்பதிவு செய்த பெட்டிகளும், ஒன்று பொதுப்பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடி கோவில்பட்டி திருமங்கலம் மதுரை, திண்டுக்கல் திருச்சி அரியலூர் விழுப்புரம் வழியாக தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (15.1.2025) காலை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

44
Train Ticket

Train Ticket

மதுரை டூ சென்னை

இதே போல சென்னைக்கும் - மதுரைக்கும் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மெமு வகை ரயில் இயக்கப்படவுள்ளதாகவும், இந்த ரயில் ஜனவரி 15ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படும் எனவும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு சிறப்புரயிலானது (ரயில் எண் 06061/06062)  ஜனவரி 18ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்தும்,  19ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கும் மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved