MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிபதி! அடுத்தடுத்து வெளியான ட்விஸ்ட்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிபதி! அடுத்தடுத்து வெளியான ட்விஸ்ட்!

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், நீதிபதி மாற்றம் செய்யப்பட்டது.

1 Min read
vinoth kumar
Published : Apr 29 2025, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
pollachi

pollachi

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக  திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ்,  அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். முதலில் சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் பின்னர் சிபிஐ வசம் சென்றது. 

24
pollachi case

pollachi case

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையிலும், அதிமுக முன்னாள் செயலாளரான அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் ஆகியோர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து அரசு தரப்பு, எதிர் தரப்பு என அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

34
pollachi case

pollachi case

தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிபதி மாற்றம்

அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்ட 9 பேர்களுக்கு எதிராக சாட்சியங்கள் அளித்ததை அடுத்து அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நந்தினி தேவி உள்பட 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

44
pollachi rape

pollachi rape

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகிறதா?

இந்நிலையில், இந்த வழக்கில் திட்டமிட்டபடி 13-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்ற நடவடிக்கைக்கு சிறிது காலமாகும் 
என்பதால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி அந்த வழக்கில் தீர்ப்பை அறிவித்த பின்னரே கரூர் மாவட்ட நீதிமன்ற பணிக்கு செல்வார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved