MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நள்ளிரவில் அதிர்ந்த கோவை.. மாணவியை வன்கொடுமை செய்த மூவரை சுட்டு பிடித்த போலீஸ்

நள்ளிரவில் அதிர்ந்த கோவை.. மாணவியை வன்கொடுமை செய்த மூவரை சுட்டு பிடித்த போலீஸ்

Coimbatore: கோவை விமான நிலையம் அருகே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவரையும் காவல் துறையினர் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
Published : Nov 04 2025, 06:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
Image Credit : Asianet News

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை விமான நிலையம் அருகே ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் தனது நண்பருடன் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு மதுபோதையில் வந்த மூவர் அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறங்குமாறு வற்புறுத்தி உள்ளனர். இருவரும் மறுப்பு தெரிவிக்கவே தங்கள் கைகளில் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி காரின் கண்ணாடியை உடைத்து இருவரையும் வெளியே இழுத்துள்ளனர்.

24
பாதிக்கப்பட்டவர்களை மீட்ட போலீஸ்
Image Credit : Gemini

பாதிக்கப்பட்டவர்களை மீட்ட போலீஸ்

பின்னர் ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி அங்கிருந்து விரட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Related Articles

Related image1
மனசு பதறுதுங்க.. கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது - தமிழிசை ஆதங்கம்
Related image2
திமுக அரசுக்கு எதிராக தீப்பந்தத்தை கையில் ஏந்திய பாஜக! பெண்களுக்கு பாதுகாப்பில்லை! குலுங்கிய கோவை!
34
7 தனிப்படைகள் அமைப்பு
Image Credit : Asianet News

7 தனிப்படைகள் அமைப்பு

தமிழகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

44
குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு
Image Credit : Asianet News

குற்றவாளிகள் சுட்டு பிடிப்பு

இந்நிலையில் கோவை துடியலூர் அருகே குற்றவாளிகள் மூவரும் தங்கியிருப்பதை காவல் துறையினர் கண்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது அவர்கள் அரிவாளால் தாக்கியதில் தலைமைக் காவலர் சந்திரசேகர் காயம் அடைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் குற்றவாளிகள் சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன், குணா (எ) தவசி ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூவருக்கும் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கோயம்புத்தூர்
காவல்துறை என்கவுண்டர்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
மனசு பதறுதுங்க.. கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது - தமிழிசை ஆதங்கம்
Recommended image2
திமுக அரசுக்கு எதிராக தீப்பந்தத்தை கையில் ஏந்திய பாஜக! பெண்களுக்கு பாதுகாப்பில்லை! குலுங்கிய கோவை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved