MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் மீண்டும் கதற விடும் சென்னை போலீஸ் கமிஷனர்; ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு அடுத்த ஷாக் தகவல்!!

மீண்டும் மீண்டும் கதற விடும் சென்னை போலீஸ் கமிஷனர்; ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு அடுத்த ஷாக் தகவல்!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சொத்துக்களை முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 29 2024, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Armstrong Murder

Armstrong Murder

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்

வட சென்னை பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது புதிய வீட்டருக்கே நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை சுத்துப்போட்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் 11 பேர் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்தனர். 

26
Armstrong

Armstrong

என்கவுன்டரில் சுட்டுக்கொலை

இருந்த போதும் இந்த கொலைக்கு பின்னனியில் யார் உள்ளார்கள் என்ற தகவலை தெரிவிக்க மறுத்தனர். அப்போது தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கொலையாளிகள் இந்த கொலைக்கு பின்னனியில் யார் யார் உள்ளார்கள் என தகவலை கூற தொடங்கினர். இதனையடுத்து தான் அதிமுக, திமுக, பாஜக, தமாகா, தேமுதிக என பல கட்சி நிர்வாகிகள் சிக்கினர்.

36
Armstrong

Armstrong

கொலைக்கு பல லட்சம் பணம்

இதில் முக்கியமாக கொலைக்கு பல லட்சம் ரூபாய் பணம் கைமாறப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் பல ரவுடிகளின் பெயர்கள் வெளி வர தொடங்கியது. குறிப்பாக சம்போ செந்தில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது. ஆனால் சம்போ செந்திலை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினாலும் இன்னும் சம்போ செந்திலை கைது செய்ய முடியாத நிலை உள்ளது.

இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?

46

சென்னை கமிஷனர் எச்சரிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு சென்னை மாநகர ஆணையராக பொறுப்பேற்ற அருண், நேரடியாகவே ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே பாடம் நடத்தப்படும் என தெரிவித்தார். அப்போது தான் குற்றவாளி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அடுத்ததாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று போலீசார் ஆய்வு செய்ய தொடங்கினர்.

56
Armstrong

Armstrong

குற்றவாளிகளுக்கு செக்

தற்போது அடுத்தாக ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் சிக்கிய 21 பேரின் சொத்துக்களை முடக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொலை செய்வதற்கு கூலியாக பல லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு,  சிறையில் இருந்து சில மாதங்களுக்கு பிறகு வெளியே வந்துவிடலாம். பிறகு ஜாலியாக இருக்கலாம் என நினைத்த கூலிப்படையினருக்கு செக் வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

66

சொத்துக்கள் முடக்கம்

அந்த வகையில் திமுக அருள், அதிமுக மலர் கொடி, ஹரிஹரன், பாஜக அஞ்சலை உள்ளிட்ட 21 பேரின் சொத்துக்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளின் பணம் முடக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Armstrong : ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது நான் தான்.! ஆம்ஸ்ட்ராங் கொலை ஏன்.? வெளியான ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Recommended image2
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Recommended image3
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved