MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷாக்கிங் நியூஸ்! பாமக பிரமுகர் படுகொ*! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

ஷாக்கிங் நியூஸ்! பாமக பிரமுகர் படுகொ*! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மேனும், பாமக துணை செயலாளருமான வாசு, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 16 2025, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

செங்கல்பட்டு மாவட்டம் இளம்தோப்பு பகுதியை சேர்ந்த வாசு. இவர் இரண்டு முறையாக காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மேனாக பதவி வகித்துள்ளார். பாமக துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வந்துள்ளார். மேலும் கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார்.

24
Image Credit : Asianet News

இந்நிலையில் தண்ணீர் லாரியில் தண்ணீர் நிரப்ப வந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த வாசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்தனர்.

Related Articles

Related image1
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் கனமழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
Related image2
மீண்டும் தூத்துக்குடியில் பயங்கரம்! வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி! உள்ளே நுழைந்த போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன்!
34
Image Credit : our own

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக அல்லது அரசியல் காரணம் கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

44
Image Credit : our own

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
காவல்
குற்றம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் கனமழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?
Recommended image2
மீண்டும் தூத்துக்குடியில் பயங்கரம்! வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி! உள்ளே நுழைந்த போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved