MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மீண்டும் தூத்துக்குடியில் பயங்கரம்! வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி! உள்ளே நுழைந்த போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன்!

மீண்டும் தூத்துக்குடியில் பயங்கரம்! வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி! உள்ளே நுழைந்த போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன்!

தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டு ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்த பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாய் பிரிந்து செல்ல தந்தையின் கள்ளக்காதலே காரணம் என ஆத்திரமடைந்த போலீஸ் ஏட்டுவின் 16 வயது மகன், நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

1 Min read
vinoth kumar
Published : Sep 16 2025, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சக்தி மகேஸ்வரி
Image Credit : Asianet News

சக்தி மகேஸ்வரி

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி மகேஸ்வரி (38). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

24
கண்டித்த குடும்பத்தினர்
Image Credit : Asianet News

கண்டித்த குடும்பத்தினர்

அப்போது இவரது உறவினரான தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் ஏட்டு குடும்பத்திற்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளர். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

Related Articles

Related image1
என் பொண்ண என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிட்ட இல்ல! 10 வருட காதலுக்கு ஒரே இரவில் முடிவு கட்டிய மாலினி வீட்டார்!
Related image2
டமால் டுமீல்! சென்னையில் மழை காட்டு காட்டுன்னு காட்டப் போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
34
சக்தி மகேஸ்வரி வீட்டுக்குள் நுழைந்த சிறுவன்
Image Credit : Google

சக்தி மகேஸ்வரி வீட்டுக்குள் நுழைந்த சிறுவன்

இதனால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். மகள் மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மகன் தந்தையுடன் வசித்துள்ளனர். போலீஸ் ஏட்டு தனது மகள், மகனை சரிவர கவனிக்காமல் அடிக்கடி சக்தி மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். தாய் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரிதான் காரணம் என்று போலீஸ் ஏட்டுவின் மகன் கருதினான். இதனால் அவரை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று மாலை ஏட்டுவின் மகன் மற்றும் தனது நண்பனுடன் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

44
போலீஸ் கைது
Image Credit : ANI

போலீஸ் கைது

பின்னர் இரண்டு சிறுவர்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்தி மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தந்தையின் கள்ளக்காதலியை மகன் மற்றும் அவரது நண்பனுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தூத்துக்குடி
கொலை
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved