MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! அன்புமணியின் உரிமை மீட்பு பயணம் தொடரும் - பாலு திட்டவட்டம்

எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! அன்புமணியின் உரிமை மீட்பு பயணம் தொடரும் - பாலு திட்டவட்டம்

பாமக.வின் தலைவர் அன்புமணியின் உரிமை மீட்பு பயணம் திட்டமிட்டபடி தொடரும், காவல் துறையினர் பயணத்திற்கு தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார்.

1 Min read
Velmurugan s
Published : Jul 26 2025, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அன்புமணியின் உரிமை மீட்பு பயணம்
Image Credit : X/draramadoss

அன்புமணியின் உரிமை மீட்பு பயணம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைபயணத்தை நேற்றுத் தொடங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த பயணம் வருகின்ற நவம்பர் 1ம் தேதி நிறைவடைவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

24
தந்தை, மகன் இடையே மோதல்
Image Credit : X/draramadoss

தந்தை, மகன் இடையே மோதல்

ஏற்கனவே பாமக.வில் தந்தை, மகன் இடையே மோதல் நிலவும் நிலையில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கட்சியின் நிறுவனரான எனது அனுமதி இல்லாமல் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அன்புமணியின் நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும் அன்புமணி பொதுமக்களை சந்திப்பதற்கும், கட்சியின் கொடி, கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

Related Articles

Related image1
அவரை உடனே தடுத்து நிறுத்துங்க! சட்டம் ஒழுங்குக்கே பிரச்சினையாகிடும் - அன்புமணியை எகிறி அடிக்கும் ராமதாஸ்
Related image2
அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த ஷாக்! நடைபயணத்திற்கு தடை விதித்த டிஜிபி!
34
டிஜிபியின் சுற்றறிக்கையால் பரபரப்பு
Image Credit : X/draramadoss

டிஜிபியின் சுற்றறிக்கையால் பரபரப்பு

இதன் தொடர்ச்சியாக டிஜிபி அலுவலகத்தில் இருந்து அன்புமணியின் நடைபயணம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் அன்புமணியின் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

44
எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம்
Image Credit : X/draramadoss

எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம்

இந்நிலையில் பாமகவின் அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு சுற்றறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார். அதன்படி டிஜிபி.யின் சுற்றறிக்கை தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டள்ளது. நிறுவனர் ராமதாஸ் வழங்கிய மனுவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு டிஜிபி ஃபார்வேர்ட் மட்டுமே செய்துள்ளார். மாறாக பயணத்திற்கு தடை விதிக்கவில்லை. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அன்புமணியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
இராமதாஸ்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved